எதிர்நீச்சல்: குணசேகரனிடம் இருந்து சொத்தை மாற்றிய ஜீவானந்தம்.. கோபத்தில் ஜனனி.. பரபரப்பின் உச்சம்
சென்னை: குணசேகரன் பட்டமாளின் 40% சொத்து தன்னுடைய பெயருக்கு வரும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவருக்கு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.
சொத்து விஷயத்தில் நடந்ததை தெரிந்து கொண்ட ஜனனி கடும் கோபத்தில் சவால் விடுகிறார்.
அதே நேரத்தில் ஜீவானந்தம் இனி என்ன மாதிரி பிரச்சனை செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே இதுவரைக்கும் குடும்பத்தில் அமைதியாக இருந்த மருமகள்கள் தொடர்ச்சியாக குணசேகரனை எதிர்த்து பேச துணிந்து இருக்கின்றனர்.
அதே நேரத்தில் குழந்தைகள் கூட குணசேகரனை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் பொறுமையாக இருக்கும் குணசேகரன் இன்னும் ஒரு நாளைக்குள் அப்பத்தாவின் சொத்து எல்லாம் தன்னுடைய பெயருக்கு வந்து விடும் அதற்குப் பிறகு இவர்களை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் தற்போது வெளியான ப்ரோமோ அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் அந்த ப்ரோமோவில் குணசேகரனிடம் ஆடிட்டர் வந்து சொத்து முழுவதும் போச்சு என்று சொல்ல, குணசேகரன் ஏன் சொத்து அரசாங்கம் சீல் வச்சிட்டாங்களா? என்று கேட்க, அவர் சார் ஜீவானந்தம் என்ற ஒரு ஆளு சொத்து முழுவதும் எடுத்துக்கிட்டாரு என்று சொல்ல குணசேகரன், கதிர் என அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
இந்த நிலையில் அதைத்தொடர்ந்து ஜனனி, குணசேகரனால் வின் பண்ணவே முடியாது. இன்னைக்கு அந்த ஆளா, நானா என்று பார்த்திடலாம் என்று ஈஸ்வரியிடம் சொல்கிறார். இந்த நிலையில் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எப்படி சொத்தை மீட்க போகிறார். அதே நேரத்தில் குணசேகரனும் துணையாக இருப்பாரா? அல்லது குணசேகரன் இன்னொரு பக்கம் நின்று ஜனனிக்கு பிரச்சனை கொடுப்பாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதுபோல இந்த பிரமோவிற்கு அதிகமான ரசிகர்கள் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஜீவானந்தம் கேரக்டர் எங்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்று ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அது போல இன்னும் ஒரு சில ரசிகர்கள் சக்தி மற்றும் ஜனனிக்கு இன்னும் அழுத்தமான கேரக்டராக கொடுக்கலாம். தாரா மற்றும் தர்ஷினிக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் கூட சக்தி, ஜனனிக்கு கொடுக்கப்படவில்லை என்றும் வருத்தத்தை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications