அருணுடன் மாலையும் கழுத்துமாக ஆதிரை.. தாலி கட்டிய கரிகாலன்.. இனி நடக்கப் போவது இதுதானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாருமே எதிர்பார்க்காத ப்ரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே கரிகாலன் ஆதிரை கழுத்தில் தாலி கட்டி இருக்கிறார்.
ஆனால் ஆதிரை மற்றும் அருண் இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்திகிறது.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல, இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலிலும் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யாரும் யூகிக்க முடியாத வகையில் கதை நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் ஒரு சில மாதங்களாகவே ஆதிரை திருமண ட்ராக் தொடங்கியதிலிருந்து கதை ஒரே பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கருத்து கூறி வந்தனர். ரசிகர்களுக்கு அலுப்பு தட்டும் வகையில் கதை பல மாதங்களாகவே ஆதிரை காதல், அதை தொடர்ந்து திருமணம் என அடுத்தடுத்த பிரச்சனைகளை பற்றியதாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் ஆதிரை யாரை திருமணம் செய்வார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்தது. காமெடியாக கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கும் கரிகாலன் ஆதிரையை கல்யாணம் செய்யப் போகிறாரா? அல்லது நாளுக்கு நாள் காதலித்து விட்டு காதலித்த பெண் மீது எந்த அக்கறையும் இல்லாமல் இருந்த அருண் ஆதிரையை கல்யாணம் செய்யப் போகிறாரா? என்று அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் பிரமோவில் அருணோடு கல்யாணம் செய்யலாம் என்று கோவிலில் காத்திருந்த ஆதிரையை தரதரவன இழுத்துக்கொண்டு வந்த குணசேகரனும், கதிரும் நடுரோட்டில் வைத்து அங்கு கூடியிருந்த கூட்டத்தின் முன்பு கரிகாலனை தாலி கட்ட சொல்லி கல்யாணத்தை முடித்து விட்டனர்.

இது ஒரு சிலருக்கு அதிர்ச்சியாக இருப்பதாகவும் ஒரு சிலர் நாங்கள் இதைத்தான் எதிர்பார்த்தோம். இப்படி இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சில புகைப்படங்கள் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஆதிரை கோவிலில் கட்டி இருந்த அதே புடவையோடு கழுத்தில் மாலையோடு அமர்ந்திருக்க, அருகில் அருணும் மாலையோடு அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அருணுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடக்குமா?...
அல்லது ப்ரோமோவில் காட்டியப்படி கரிகாலனோடு ஆதிரைக்கு திருமணம் நடக்குமா? என்று பெரும் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஒருவேளை அருணோடு திருமணம் நடக்காமல் கரிகாலன் ஆதிரை கழுத்தில் தாலி கட்டினால் தனக்கு பிடிக்காத திருமணம் என்று ஆதிரை தாலியை கழற்றி தூக்கி வீசி விட்டு, தன்னுடைய வாழ்க்கைக்கு தனியாகவே முடிவெடுத்து எதிர்நீச்சல் அடிக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி கதை வைத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications