மாரிமுத்துவின் வீடு விஷயத்தில் வெளியே சொல்லுவதெல்லாம் பொய்.. நடந்தது இதுதான்.. மனைவி எமோஷனல்
சென்னை: மறைந்த நடிகர் மாரிமுத்துவின் வீடு குறித்து சமூக வலைதளத்தில் அவருடைய நண்பர்கள் உறவினர்கள் என பலரும் பல தகவல்கள் கூறி வருகின்றனர்.
நடிகர் மாரிமுத்து பெரிய அளவில் ஆசைப்பட்டு வீடு கட்டினார். ஆனால் அந்த வீட்டிற்குள் அவர் போகவில்லை என்று பலர் கூறி வருகின்றனர்.

ஆனால் பலரும் சொல்வதெல்லாம் பொய் என்றும் என்ன நடந்தது என்பது பற்றி முதல்முறையாக நடிகர் மாரிமுத்துவின் மனைவி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
நடிகர் மாரிமுத்து எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததன் மூலமாக பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். மீம்ஸ் கிரியேட்டர்களில் ட்ரெண்டிங் ஸ்டார் ஆகவும் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் பல வருடமாக கஷ்டப்பட்டு போராடி புகழின் உச்சத்தில் இருக்கும் போதே அவரை மரணம் தழுவிக் கொண்டது.
அதே நேரத்தில் மாரிமுத்து உயிரோடு இருக்கும் வரைக்கும் அவருடைய சொந்த வீட்டு கனவு பற்றி அடிக்கடி தன்னுடைய நண்பர்களிடமும் தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடமும் பேசிக் கொண்டிருப்பார் என்று பலரும் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் மாரிமுத்துவின் மனைவி அது குறித்த விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில் பலர் பேட்டிகளிலும் சரி, செய்திகளிலும் சரி மாரிமுத்து ஆசையாக கட்டிய வீட்டிற்குள் போகவில்லை அதற்குள் அவர் இறந்து போய்விட்டார் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுவெல்லாம் உண்மை கிடையாது. என்னுடைய கணவர் ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு மூன்று முறை அந்த வீட்டிற்கு சென்று வருவார். அதில் போகும்போதெல்லாம் ஒவ்வொரு வேலையாக சொல்லி அதை மாற்றனும் இதை மாற்றனும் என்று மாற்றி பார்த்து பார்த்து கட்டிக் கொண்டு இருந்தார்.

அதுபோல நாங்கள் வீடு வாங்கி இருக்கும் அப்பார்ட்மெண்டில் வேறு யாரும் இவரைப் போன்று வீட்டிற்கு சென்று வந்திருக்க மாட்டார்கள். இவர் மட்டும்தான் அடிக்கடி அந்த வீட்டிற்கு போய்விட்டு வந்தார். அந்த வீட்டிற்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக குடிப்பெயரவில்லை அவ்வளவுதான். அது போல சிலர் மாரிமுத்துவின் ஆவி அந்த வீட்டில் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுவெல்லாம் கேவலம் இப்படியெல்லாம் யாராவது சொல்லலாமா?
என்னுடைய கணவர் இறந்து போயிருந்தாலும் அவர் எங்க கூட தான் இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்களுக்கு ஒவ்வொரு முறையும் தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறார். எந்த நேரத்திலும் உடைந்து போகக்கூடாது என்று எப்போதுமே சொல்லிக் கொண்டிருப்பார். எல்லோருக்கும் மரணம் ஒரு நாள் வரும். அதை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது அடுத்து என்ன செய்யணுமோ அதை நோக்கி பயணத்தை தொடங்க வேண்டும் என்று தான் அவர் சொல்லிக்கொண்டே இருப்பார்.
நாங்கள் இப்போதுதான் மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்களை நாங்களே ஆறுதல் படுத்தி கொண்டிருக்கிறோம். ஆனால் பலர் இந்த மாதிரி பேசுவது வேதனையாக இருக்கிறது. அதை நேரத்தில் அதிகமானோர் எங்களுக்கு ஆறுதலாக இருப்பதும் ரொம்பவே சந்தோஷமாகவும் இருக்கிறது என்றும் அந்த பேட்டியில் நடிகர் மாரிமுத்துவின் மனைவி பேசியிருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications