Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் எரியூட்டும் முன்பு மனைவிக்கு தாலி கட்டிய கவுண்டமணி! கதறிய மகள்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது. அப்போது தனது மனைவிக்கு கடைசியாக கவுண்டமணி தாலி கட்டினார். மகள்கள் செல்வியும் சுமித்ராவும் கதறி அழுதனர்.

நடிகர் கவுண்டமணி, 1970 ஆம் ஆண்டு சிவாஜியின் ராமன் எத்தனை ராமனடி என்ற திரைப்படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் கவுண்டமணி. இவர் தேனும் பாலும் எனும் திரைப்படத்தில் சுப்பிரமணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

television goundamani

இதையடுத்து 1977 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர், கரகாட்டக்காரன் படத்தில் வாழைப்பழ காமெடியில் கலக்கியதை யாராலும் மறக்கவே முடியாது.

காதல் திருமணம்

திரைத்துறையில் புகழ் பெற்றிருந்த போதே சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே சாந்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10.30 மணிக்கு சாந்தி இறந்துவிட்டார். அவருக்கு வயது 67. சாந்தியின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

நண்பர்கள் ஆறுதல்

கவுண்டமணியின் நண்பர்களான சத்யராஜ், செந்தில், நிழல்கள் ரவி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் அவருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அது போல் தவெக தலைவரும் நடிகர் விஜய்யும் நேரில் சென்று சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கவுண்டமணியை இறுக அணைத்து ஆறுதல் தெரிவித்தார்.

television goundamani

இந்த நிலையில் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடலுக்கு இன்று காலை 11 மணிக்கு இறுதி சடங்கு நடந்தது. அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இறுக்கமான கவுண்டமணி

அப்போது கவுண்டமணியின் முகம் மிகவும் இறுக்கமாக காணப்பட்டது. அவரை சீமான் உள்ளிட்டோர் ஆசுவாசப்படுத்தினர். இந்த நிலையில் கவுண்டமணியின் குடும்ப வழக்கப்படி சாந்தியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன.

தாலி கட்டிய கவுண்டமணி

அப்போது மஞ்சள் கயிற்றில் தனது மனைவியின் உடலுக்கு கவுண்டமணி தாலி கட்டினார். அந்த நேரம் மனதிற்குள்ளே விம்மி வெடித்தார். அது முகத்தில் அப்படியே பிரதிபலித்தது. ஏற்கெனவே தனது மகள்கள் கதறி கொண்டிருக்கையில், தானும் அழுதால் தனது மகள்களுக்கு யார் ஆறுதல் சொல்வது என நினைத்தாரோ என்னவோ அத்தனை சோகத்தையும் முகத்திலேயே காட்டினார்.

கதறிய மகள்கள்

மனைவிக்கு தாலி கட்டிய போது அவருடைய மகள்கள் இருவரும் கதறி அழுதனர். இது காண்போரை கலங்கச் செய்தது. மனைவியின் இழப்பிலிருந்து அவர் விரைவில் மீண்டு வர வேண்டும். அவரது திரைத்துறை நண்பர்கள் இதற்கு உதவ வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது.

அதிர்ஷ்டமான சாந்தி

கவுண்டமணியும் சாந்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனராம். கவுண்டமணி வாழ்வில் சாந்தி வந்ததும்தான் அவருக்கு அதிர்ஷ்டம் வந்ததாக கவுண்டமணி அடிக்கடி சொல்வாராம். அது போல் ஷூட்டிங்கிற்கு எப்போது செல்ல வேண்டுமானாலும் தனது மனைவி கையால் கைச்செலவுக்கு காசு வாங்கிக் கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம்.

மகள்களுக்கு மனிதம்

கவுண்டமணிக்கு இரு மகள்கள் செல்வி, சுமித்ரா. இவர்கள் இருவருமே நன்கு படித்துள்ளனராம். சென்னையில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் தனது கணவருடன் வந்து சுமித்ரா சேவை செய்கிறாராம். தனது மகள்களுக்கு மனிதத்தையும் ஊட்டி வளர்த்திருக்கிறார்கள் சாந்தியும் மணியும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+