பிரம்மாண்டமாக நடந்த கனா காணும் காலங்கள் நடிகர்கள் திருமணம்..கடைசியில் டிவிஸ்ட்..கண் கலங்கிய தீபிகா
சென்னை: டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் சீரியலில் அபியாக நடிக்கும் தீபிகா மற்றும் கௌதமாக நடிக்கும் ராஜா வெற்றி பிரபு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிவடைந்தது.
அவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.
தாலி கட்டும் நேரத்தில் தீபிகா கண்கலங்கி அழுத புகைப்படங்கள் பரவி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் வெற்றியைத் தொடர்ந்து தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் புது கனா காணும் காலங்கள் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே பிரபலம் அடைந்திருக்கின்றனர்.
அதில் அபி கேரக்டரில் நடித்து வரும் தீபிகாவும், கௌதம் கேரக்டரில் நடித்து வரும் ராஜா வெற்றி பிரபுவும் அண்மையில் தான் திருமணத்தை அறிவித்திருந்தனர். அதில் தன்னுடைய ஆறு வருட நண்பனை தான் திருமணம் செய்ய போவதாகவும் இது அரேஞ்ச் மேரேஜ் என்றும் தீபிகா தெரிவித்திருந்தார். ஆனால் காதலன் யார் என்பதைப் பற்றி தீபிகா தெரிவிக்கவில்லை.

ஆனாலும் தன்னுடைய சமூக வலைதளத்தில் இவர் தன்னுடைய பெயருக்கு பின்னால் V என்ற இன்சியல் வைத்திருந்ததை வைத்தும்,, சில கெஸ்கலை வைத்தும் ரசிகர்கள் அது ராஜா வெற்றி பிரபுதானா என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தான் தன்னுடைய எங்கேஜ்மெண்டில் தான் ராஜா வெற்றி தான் கல்யாணம் பண்ணிக்க போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து தன்னுடைய ஒவ்வொரு பங்க்ஷன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் திருமணத்தில் தாலி கட்டும் போது தீபிகா மகிழ்ச்சியில் கண் கலங்கி இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications