சினேகனின் "காதல் கவிதையால்" தூக்கத்தை தொலைத்த கன்னிகா! பண்றதையும் பண்ணிட்டு முழிக்கறத பாருங்க
சென்னை: சினேகன்- கன்னிகா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் இன்றுடன் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் தனது இரு குழந்தைகள் செய்யும் சேட்டை குறித்து கன்னிகா வெளியிட்டுள்ளார்.
சினேகன், கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதி, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பாடலாசிரியர் சினேகன், தனது நீண்ட நாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடந்தது.
கன்னிகா, சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு தொடரில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தேவராட்டம், ராஜவம்சம் படங்களிலும் பிரதான வேடங்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
இதுகுறித்து சினேகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது. தாயே எந்தன் மகளாகவும்... மகளே எந்தன் தாயாகவும் இரு தேவதைகள் பிறந்து இருக்கிறார்கள்" என அறிவித்திருந்தார்.
இதையடுத்து தனது தேவதைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த சினேகன், சில தினங்கள் கழித்து கமல்ஹாசன் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றார். அங்கு அவரிடம் குழந்தைகளை காட்டி ஆசி பெற்றனர். குழந்தைகளுக்கு தங்க வளையல் அணிவித்தார் கமல்ஹாசன்.
பின்னர் இரு குழந்தைகளுக்கும் பெயர் வைக்க சொன்ன போது ஒரு குழந்தைக்கு காதல், இன்னொரு குழந்தைக்கு கவிதை என பெயர் சூட்டினார். இதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோவையும் சினேகனும் கன்னிகாவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.
அதில் காதலர் தினத்தில் எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையலோடு "காதல் கன்னிகா சினேகன்" என்ற பெயரையும், "கவிதை கன்னிகா சினேகன்" என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள் என்று தெரிவித்திருந்தனர்.
பொதுவாக குழந்தை பிறந்த வீட்டில் வேலை இருந்து கொண்டே இருக்கும் என்பார்கள். அது போல் குழந்தையை பெற்ற தாய்க்கு உண்பதற்கும், உறங்குவதற்கும் நேரம் இருக்காது என்பார்கள். அந்த வகையில் கன்னிகா ஒரு இன்ஸ்டா போஸ்ட்டை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் வடிவேல் காமெடியை போட்டு தான் உணவு உண்பதற்கு காலதாமதம் ஆவதாக வீடியோ போட்டிருந்தார். அது சிரிப்பை வரவழைத்தது. ஒரு மனுசன் காலையில எத்தனை மணிக்கு சாப்பிடுவான், நான் 12.30 மணிக்கு சாப்பிடுகிறேன்" என்ற போது கன்னிகா பழங்களை சாப்பிடும் போது 12.30 மணி என நேரத்தை காட்டுகிறார்.
இப்படியே அந்த காமெடியில் அப்ப மதியான சாப்பாடு 4.30 மணிக்கு, அப்ப ராத்திரி, விடிஞ்சிருங்க! அப்ப தூக்கம், அட நீங்க வேற சாப்பிட்டு ஏப்பம் விடுவதும் சேவல் கூவுறதும் ஒரே கோரஸாக இருக்கும். இந்த அளவுக்கு உங்களை கொடுமைப்படுத்துறது யாருங்க என அந்த காமெடி முடியும். அப்போது கன்னிகா கையில் இரட்டை குழந்தைகளை வைத்துக் கொண்டு இவங்க தான் என சொல்வது போல் இருக்கும்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications