Kara Box Office Day 5: கர படத்தின் 5ஆம் வசூல் இவ்வளவுதானா? தனுஷ் நடிப்பு நல்லா இருந்தும் நிலைமை இப்படி ஆகிடுச்சே!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கர' திரைப்படம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'போர்த்தொழில்' மூலம் கவனம் பெற்ற இயக்குநரும், பல்வேறு விதமான கதைகளில் தன்னை நிரூபித்த நடிகருமான தனுஷும் இணைந்திருப்பதால், இந்த படத்திற்கு வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

கர பட நடிகர்கள்
இந்த படத்தில் தனுஷுடன் மமிதா பைஜு, கே. எஸ். ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்றனர். ஆனால் படம் வெளியாகிய பிறகு கிடைத்த வரவேற்பு அந்த எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றவில்லை.
கர படம் விமர்சனங்கள்
கதை த்ரில்லர் மற்றும் எமோஷனல் அம்சங்களை இணைத்ததாக இருந்தாலும், அதை திரையில் கொண்டு வந்த விதம் பலருக்கும் ஈர்ப்பாக அமையவில்லை. குறிப்பாக காட்சிகளின் அமைப்பு மற்றும் கதை நகருவது மெதுவாக இருந்ததாகவும், சில இடங்களில் குழப்பமாக இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. முதல் பாதி ஓரளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதி எதிர்பார்த்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தவில்லை. கிளைமாக்ஸ் கூட ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.

இருப்பினும், படத்தின் மிகப்பெரிய பலம் தனுஷின் நடிப்பே என ரசிகர்கள் கூறுகின்றனர். எமோஷனல் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் அவர் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். பலர் "படம் சரியாக அமையவில்லை, ஆனால் தனுஷின் நடிப்பு மிகச் சிறந்தது" என்று கருத்து தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நல்ல நடிப்பு அளித்தும், சரியான திரைக்கதை இல்லாததால் அந்த உழைப்பு முழுமையாக பலிக்கவில்லை என்ற வருத்தமும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இசை விஷயத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்த பின்னணி இசை சில காட்சிகளில் படத்திற்கு உதவியாக இருந்தாலும், பாடல்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பு போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் சராசரியாக இருந்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கட படம் வசூல் நிலவரம்
வசூல் நிலவரத்தைப் பார்க்கும்போது, படம் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேறவில்லை. வெளியீட்டின் முதல் இரண்டு நாட்களில் தலா சுமார் ஆறு கோடி ரூபாய் வசூலித்தது. அதன் பிறகு வசூல் ஏற்றத்தாழ்வுடன் இருந்தது. ஐந்தாவது நாளில் படம் வெறும் 1.80 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக ஐந்து நாட்களில் கூட படம் 50 கோடி ரூபாயை எட்டவில்லை என்பது பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தனுஷுக்கு ஒரு பெரிய திரையரங்கு வெற்றி கிடைக்காத நிலையில், இந்த படம் அந்த நிலையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'கர' திரைப்படமும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால், நல்ல கதைத்தேர்வு மற்றும் வலுவான திரைக்கதை முக்கியம் என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
மொத்தத்தில், 'கர' திரைப்படம் எதிர்பார்ப்பை உருவாக்கி, அதை முழுமையாக நிறைவேற்ற முடியாத படமாக மாறியுள்ளது. தனுஷின் நடிப்பு பாராட்டைப் பெற்றிருந்தாலும், திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ஏற்பட்ட குறைகள் காரணமாக படம் வெற்றியை எட்டவில்லை. தற்போது, தனுஷின் அடுத்த படமே இந்த நிலையை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.













Click it and Unblock the Notifications