நீயா நானாவுடன் ஒப்பீடு.. நான் வேலை செய்றேன்! நெட்டிசன் சும்மா இருக்காங்க -வாய் திறந்த கரு.பழனியப்பன்
சென்னை: நீயா நானா கோபிநாத்துடன் ஒப்பிட்டு தமிழா தமிழா நிகழ்ச்சியை நடத்தி வரும் இயக்குநர் கரு.பழனியப்பனை மீம் கிரியேட்டர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் வாரந்தோரும் ஏதாவது ஒரு வித்தியாசமான தலைப்பை முன்வைத்து விவாதங்கள் நடத்தப்படுவது வழக்கம். சமுதாயத்தில் உள்ள பல பழமைவாதங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் வேலைக்கு அமர்த்திய குடும்பத்தலைவிகள் vs பணிப்பெண்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதம், படித்த அம்மா VS படிக்காத அப்பா என்ற தலைப்பில் விவாதங்கள் அதிகளவில் பிரபலமானது.

தமிழா தமிழா
நீயா நானாவை போன்றே ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தமிழா தமிழாவில் ரக்கட் பாய்ஸ் vs சாக்லேட் பாய்ஸ் என்ற பெயரில் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ரக்கட் பாய்ஸ் விவாதம்
இதில் ராக்கட் பாய்ஸ் பிடிக்கும் என்று பேசிய பெண்களில் பலர் ஆண்களை உருவ கேலி செய்ததாகவும், தாடி வளராததை வைத்து விமர்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக இயக்குநர் கரு.பழனியப்பன், பெண்களை ஒருமையில் பேசிய ஆண்களை கடுமையாக கண்டித்ததாகவும், அதே நேரம் ஆண்களை ஒருமையில் பேசிய பெண்களை கண்டுகொள்ளவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.

கோபிநாத் VS கரு.பழனியப்பன்
அடுத்தடுத்து சமூக அக்கறை கொண்ட தலைப்புகளை எடுத்து விவாதித்ததன் காரணமாகவும், அதில் கோபிநாத்தின் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட பலர் அவரை பாராட்டித் தள்ளி வருகின்றனர். இதில் ஒருசிலர் தமிழா தமிழா நிகழ்ச்சியை நடத்தி வரும் கரு.பழனியப்பனை கோபிநாத்துடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

எல்லை மீறும் மீம்ஸ்கள்
இதனை விமர்சிப்பதற்கு உரிமை இருந்தாலும் மீம்ஸ் என்ற பெயரில் எல்லை கரு.பழனியப்பன் விமர்சிக்கப்படுவதாகவே தெரிகிறது. குறிப்பாக நிகழ்ச்சியில் அவர் நடந்துகொண்டதை பற்றி விமர்சிக்காமல் அவர் மீது தனிநபர் தாக்குதல்களை தொடுப்பது, உருவ கேலி செய்வது போன்ற விமர்சனங்களை அதிகம் காண முடிகிறது.

முற்போக்கு தலைப்புகள்
இயக்குநர் கரு.பழனியப்பனும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சாதி, மத ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும், பெண்கள் ஒடுக்குமுறை, மூட நம்பிக்களுக்கு எதிராகவும் பல முற்போக்கு தலைப்புகளில் விவாத நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பான கருத்துக்களை தெரிவித்தவர்தான் என்று நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

கரு.பழனியப்பன் விளக்கம்
ஒரு பக்கம் விமர்சனக்கள் அதிகரித்து சென்றாலும் கரு.பழனியப்பன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக முதல் முறையாக அவர் வாய் திறந்தார்.

வெட்டியாக இருக்கிறார்கள்
"ஏற்கனவே இதேபோல் சமூக வலைதளங்களில் எனக்கு பாராட்டுக்கள் வந்தபோது நான் அதை நினைத்து மகிழ மாட்டேன். அவர்கள் பாராட்டுவார்கள். மீண்டும் திட்டுவார்கள். மீண்டும் பாராட்டுவார்கள். அவர்கள் பாராட்டும் இடத்திலேயோ திட்டும் இடத்திலேயோ இருக்கிறோம் என்றால் நாம் ஒரு வேலை செய்துகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். அவர்கள் எல்லாம் சும்மா இருக்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications