நடிகை குஷ்பூவுக்கு வந்த சோதனை.. இப்படியும் ஏமாத்துறாங்க.. இது பலருக்கு பாடம்! உருக்கமான பதிவு
சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ (Khushbu Sundar) தனது பெயரை பயன்படுத்தி சிலர் போலி மெயில் அனுப்பி வருவதாக கூறி சமூக வலைதளத்தில் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

குஷ்பூ வெளியிட்ட பதிவு
தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் குஷ்பூ வெளியிட்ட பதிவில், "என் பெயரில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்கும் சந்திப்பு கேட்டு சில மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதை எல்லோருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
'[email protected]' என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து வரும் எந்த மெயிலும் என்னுடன் தொடர்புடையது அல்ல. அது முற்றிலும் போலியானது. இது ஏமாற்று முயற்சியாக இருக்கலாம்.
எனக்கு யாரையாவது சந்திக்க வேண்டியிருந்தால் நான் எப்போதும் செய்வது போல நேரடியாகவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரம் கேட்பேன். எனவே இந்த மாதிரி வரும் மின்னஞ்சல்களுக்கு தயவுசெய்து பதில் அளிக்க வேண்டாம்.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்த நபரை விரைவில் பிடிப்போம். இந்த விஷயத்தை எனக்கு தெரிவித்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு எச்சரிக்கை
இந்த பதிவின் மூலம் குஷ்பூ தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளை பற்றி பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவருடைய பதிவு வெளியானதும் பலரும் அதனை பகிர்ந்து மற்றவர்களையும் எச்சரித்து வருகின்றனர்.
சினிமா முதல் அரசியல் வரை
குஷ்பூ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர். 1990-களில் பல ஹிட் படங்களில் நடித்த அவர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி மற்றும் அரசியல்
சினிமாவுக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராகவும், தொகுப்பாளராகவும் குஷ்பூ கலந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது அரசியல் கருத்துகள் மற்றும் சமூக விஷயங்களில் அவர் வெளிப்படையாக பேசுவது காரணமாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கும்.
தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவ்
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ, சமூக பிரச்சனைகள் முதல் சினிமா வரை பல விஷயங்களில் தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் போலி மின்னஞ்சல் மோசடி குறித்து அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தற்போது இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications