இதுதான் என் பதில்.. சர்ச்சைக்கு மத்தியில் மாதம்பட்டி ரங்கராஜன் திடீர் பதிவு! ஆனாலும் இப்படி ஒரு முடிவு!
சென்னை: நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜன், சமீப காலமாகப் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டினாவுடன் அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், மாதம்பட்டி ரங்கராஜன், தான் கலந்துகொண்ட 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சினிமா பயணம்
மாதம்பட்டி ரங்கராஜன், முதலில் ஒரு சமையல் கலைஞர். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், மாதம்பட்டி என்ற பெயரில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். உணவகத் துறையில் இவர் மிகவும் பிரபலமானவர். இவரது சமையல் சேவை பல திரைப்படங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் இடம்பெற்றுள்ளது.
நடிகராக அறிமுகம்
மாதம்பட்டி ரங்கராஜன், 'பென்குயின்' மற்றும் மெஹந்தி சர்க்கஸ் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்ற அதிலும் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் இடம் பிடித்த பாடல்கள் இப்போதும் பலருடைய ப்ளே லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது. மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற கோடி அருவி கொட்டுதே பாடலுக்கு பிறகு பிரபலமடைந்த மாதம்பட்டி ரங்கராஜன் அதற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சின்ன திரையில் இறங்கிவிட்டார்.
சமீபத்திய சர்ச்சைகள்
மாதம்பட்டி ரங்கராஜன் தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டினா என்பவருடன் அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியாகி இந்தப் புகார்களுக்கு மேலும் வலு சேர்க்கின்றன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து மாதம்பட்டி ரங்கராஜன் நேரடியாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
சமீபத்தில், அவர் தான் கலந்துகொண்ட 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "மசாலாக்கள் முதல் ஸ்டைல்கள் வரை, நாங்கள் உலகத் தட்டுகளை ஆட்சி செய்தோம். குக் வித் கோமாளியில் இந்த வாரம் சிக்கன் சமைப்பதுதான் போட்டியாக இருந்தது. அதற்கு 'ஸ்வாக்' தான் பதிலாக இருந்தது!" என்றும், "இந்த வார இறுதி அத்தியாயங்களைத் தவறவிடாதீர்கள் - முழுக்க முழுக்க தீ மற்றும் வேடிக்கை நிறைந்ததாக இருக்கும்!" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கமெண்ட் ஆப்
இந்தக் குழப்பமான சூழ்நிலையில், சர்ச்சைகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், தனது பணி சார்ந்த பதிவுகளை அவர் வெளியிட்டு வருவது, ரசிகர்கள் மத்தியில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதோடு தன்னுடைய போஸ்ட்க்கு கமெண்ட் செக்ஷனை ஆப் செய்து வைத்திருக்கிறார். தன்னை பற்றி யாரும் நெகட்டிவாக கமெண்ட் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக இவர் இப்படி செய்திருக்கிறார் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: விஜயாவை கலங்க வைத்த ரோகிணி.. மீனாவிடம் போட்ட சபதம்.. அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி -
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications