மகாநதி சீரியலில் மாஸ் காட்சி.. விஜய்யாக களம் இறங்கும் பிரபல நடிகர்.. வில்லனுக்கே வில்லன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் செப்டம்பர் 26 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் காற்றுக்கென்ன வேலி சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சுவாமிநாதன் இந்த சீரியலில் விஜய் கேரக்டரில் அறிமுகம் ஆகிறார்.

காவிரி குடும்பத்திற்கு பசுபதியால் பிரச்சனை வரும்போது அந்த இடத்தில் விஜய் வந்து அதிரடி செய்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பிக்பாஸ் பற்றி லெட்டர் படித்து ஜி பி முத்து உடைத்த ரகசியம்..கடைசியில் இவருமா..?குவியும் கருத்துக்கள்
அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட மகாநதி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பிடித்து வருகிறது. அதனாலயே அந்த சீரியல் டிஆர்பியிலும் முன்னணி இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் புதியதாக கதை திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்த காவேரி குடும்பம் இருப்பதற்காக வாடகைக்கு வீடு தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்த நிலையில் இன்று ஒரு வீட்டை கண்டுபிடித்து இருக்கின்றனர். அந்த வீட்டை வெளியே இருந்து பார்க்கும்போது இவ்வளவு பெரிய வீடாக இருக்கிறதே என்று அனைவரும் பேசிக்கொண்டு வீட்டிற்குள் நுழைகின்றனர்.
அப்போது வீட்டுக்காரர் உங்களுக்கு இந்த வீடு புடிச்சிருக்கா? என்று கேட்க காவிரி குடும்பமும் ரொம்பவே பிடிச்சிருக்கு என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே பசுபதி நின்று முறைத்தபடி இவங்களுக்கெல்லாம் வீடு வாடகைக்கு கொடுக்க கூடாதுன்னு சொன்னேனா இல்லையா அப்புறம் கொடுத்தால் என்ன அர்த்தம் என்று மிரட்டுகிறார்.

அதற்கு வீட்டு ஓனர் இது என் வீடு முதலில் கிளம்பு என்று திட்டுகிறார். இதனால் கோபமடைந்த பசுபதி வீட்டு ஓனரின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். அந்த சத்தம் கேட்டு அந்த வீட்டிற்குள் இருந்து விஜய் ஆக காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் சுவாமி செங்கலை தூக்கி பசுபதி தலையில் அடிக்கிறார்.
இதைப் பார்த்து காவிரியின் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். அப்போது ஹவுஸ் ஓனரின் மனைவி அதான் விஜய் வந்துட்டான்ல எல்லாத்தையும் பாத்துக்குவான் என்று பில்டப் கொடுக்க, விஜய் வேகமாக வந்து பசுபதியின் நெஞ்சில் எட்டி மிதித்து கீழே தள்ளுகிறார். அதோடு மாஸாக கெத்து காட்டிக்கொண்டு நிற்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த சீரியல் மேலும் வேகம் கூடி இருப்பதாக அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதுபோல விஜயய்யாக அறிமுகமான நடிகர் சுவாமி ஏற்கனவே காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது. வரும் வாரத்தோடு இந்த சீரியல் முடிவடையும் நிலையில் இவர் புதிய சீரியலில் அறிமுகமாகி இருப்பது இவருடைய ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதே நேரத்தில் இவருக்கு அதிகமாக பில்டப் கொடுக்கப்படுவதால் இனி நிவின் நிலைமை என்னாகும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
ஜாய் கிரிஸில்டா வக்கீலுடன் சீரியல் நடிகை செய்த சதி! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆதாரம்.. வெளிவரும் ரகசியம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!












Click it and Unblock the Notifications