Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்யிடமே சில்மிஷம் செய்த ஜெய் கிரிஸ்டில்லா.. அஜித் கிட்ட முடியாது! பிரபலம் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளங்களில் தற்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஒரு சம்பவம், மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த சர்ச்சைகள்தான். ஒருபுறம், அவரது முதல் மனைவி மற்றும் குழந்தைகளின் நிலை குறித்த கேள்விகள் எழ, மறுபுறம், அவரது இரண்டாவது மனைவி எனக் கூறப்படும் ஜாய் கிரிசில்டா முன்வைத்த குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் ஜாய் பற்றி சுசித்ரா பேட்டி ஒன்றில் சில குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.

Mathampatti Rangaraj vijay tv Suchitra

தொழிலதிபர் முதல் நடிகர்

மாதம்பட்டி ரங்கராஜ், ஒரு திறமையான தொழில்முனைவோரும், பிரபலங்களின் திருமண விழாக்களில் உணவு சமைத்து தரும் கேட்டரிங் சேவை நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார். இவரது நிறுவனத்தின் சமையல் பிரபலமானது. பல பிரபலங்கள் வீட்டு திருமணத்திற்கும் இவர்தான் சமைத்தார் என்று கூறப்படுகிறது. இவரது டீம் சமைக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம்.

இவர், மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார்.

காதல் சர்ச்சை மற்றும் ரகசியத் திருமணம்

ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், நடிகர் ரங்கராஜுக்கு சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் ஜாய் கிரிசில்டா என்பவருடன் காதல் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இருவருக்கும் ரகசியமாகத் திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, தான் ஏழு மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, அதற்கான புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, "மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏற்க மறுப்பதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும், தனக்கு நியாயம் வேண்டும்" என்றும் பேசத் துவங்கினார். மேலும், காவல் நிலையத்திலும் ரங்கராஜ் மீது புகார் அளித்தார். தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராகப் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

ஜாய் கிரிசில்டாவின் உருக்கமான பதிவு

சில நாட்களுக்கு முன்பு, ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது.. நான் உள்ளே துடிக்க நீ வெளியே தப்பிக்கிறாய்.. இதுதானா உன் அன்பு அறிமுகம்.." என்று மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார். அத்துடன், மாதம்பட்டி ரங்கராஜுடன் தான் இருக்கும் திருமண வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.

சுசித்ராவின் பேட்டி

இந்த விவகாரம் குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பிரபல பாடகி சுசித்ரா, அதிர்ச்சி தரும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ஜாய் கிரிசில்டாவுக்குப் பல ஆண்களுடன் பழக்கம் உண்டு என்று அவர் கூறியுள்ளார். மேலும், "தங்கச்சி.. தங்கச்சி எனச் சொல்லிக்கொண்டு விஜயிடமே சில்மிஷம் செய்திருக்கிறார். அதை நானே பார்த்திருக்கிறேன். விஜய்க்கு மட்டுமல்ல.. ஜெயம் ரவி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் இது நடக்கும். இதில் சிக்காதவர் அஜித் மட்டுமே. அவரிடம் பயப்படுவார்கள்" என்று அவர் பேசியிருப்பது, திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா குறித்த இந்த சர்ச்சைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இது குறித்த உண்மைத் தன்மை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+