‘மெட்டி ஒலி’ நிர்மலா ஞாபகம் இருக்கா? சினிமாவை விட்டு விலக காரணம்! இப்போ பலருக்கும் முன்மாதிரியாக மாறிட்டாங்களே
சென்னை: ஒரு காலத்தில் சின்னத்திரையில் 'வில்லி'ன்னா யாருனு கேட்டா, பலருக்கும் முதல்ல நினைவுக்கு வர்ற பெயர் - 'மெட்டி ஒலி' நிர்மலா (Metti Oli Aruna Devi). அந்த கேரக்டரை உயிரோட நடிச்ச அருணா தேவி, திரையில் வந்தாலே வீட்டுக்குள்ள இருந்தவங்க "அட... இவ வந்துட்டாளே!"னு டிவி முன்னாடி உட்கார முடியாத அளவுக்கு கோபப்பட வைப்பார். அந்த அளவுக்கு நெகட்டிவ் ரீச் சம்பாதிச்ச நடிகைதான் அருணா தேவி.
'மெட்டி ஒலி' மட்டும் இல்லாமல், 'மனைவி', 'ஆசை', 'சிதம்பர ரகசியம்', 'குலதெய்வம்', 'கல்யாண வீடு'ன்னு தொடர்ச்சியா பல சீரியல்களில் வில்லி வேடங்களில் கலக்கியவர். சீரியல்களோட சேர்த்து 'மஸ்தானா மஸ்தானா', 'ஜோடி நம்பர் 1' மாதிரி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு, டான்ஸ், நடிப்பு இரண்டிலும் தன்னுடைய வேறொரு முகத்தையும் காட்டினார். கிளாசிக்கல் டான்ஸில் பயிற்சி பெற்றவர் என்பதால், மேடையில ஆடும் போது வில்லி நிர்மலாவை மறந்து, ரசிகர்கள் அசந்து போவாங்க.

நடிகை அருணா தேவி பேட்டி
இப்படி டிவி சீரியல்களில் பிஸியாக இருந்தவர், ஒருகட்டத்தில் திடீர்னு காணாமல் போயிட்டார். "அருணா தேவி இப்போ எங்கே?"ன்னு ரசிகர்கள் பல வருஷமா கேட்டு வந்த கேள்விக்கான பதில், அவர் சொன்ன பேட்டிகள் வைரல் ஆகி வருகிறது. அதில் கொரோனா காலகட்டத்தில் காரைக்குடியில் ஷூட்டிங்கில் இருந்த போது, மூத்த மகள் ஏஜ் அட்டென்ட் பண்ணி இருக்காங்க. அதைக் கேள்விப்பட்டதும் அருணா வீட்டிற்கு போக முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் ஷூட்டிங், லாக்டௌன் கட்டுப்பாடுகள், பயணம் எல்லாம் காரணமாக உடனே வீடு திரும்ப முடியாமல், பல நாள்கள் போராடி தான் குடும்பத்தை சேர்ந்தாராம். அந்த அனுபவம் தான் அவருக்குள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாம்.

சினிமாவை விட்டு விலக காரணம்
"ஒரு அம்மாவா, என் குழந்தைகள் வாழ்க்கையில முக்கியமான நேரத்துல கூட இருக்க முடியாம போயிடுச்சே"ன்னு அவருக்குள்ள பெரிய குற்ற உணர்ச்சி வந்ததாப். அதுக்குப் பிறகு, இனிமே சீரியல்களுக்காக ஓடிக்கிட்டிருக்க வேண்டாம், குடும்பத்துக்கே முழு நேரம் கொடுக்கணும்னு முடிவு எடுத்தாராம். குழந்தைகளின் படிப்பு, வளர்ப்பு, வீட்டுப் பொறுப்புகள் எல்லாமே முக்கியம்னு நினைச்சு, சினிமா - டிவி உலகத்திலிருந்து மெதுவா விலகினார்.
இப்போ ஸ்கூல் டீச்சர்
அதோடு மட்டும் இல்லாமல், அருணா தேவி இன்னொரு முக்கியமான முடிவும் எடுத்தார். குழந்தைகள் படிக்கும் சூழலை நேரடியாக உருவாக்கணும்னு நினைச்சு, சென்னையில் பிளே ஸ்கூல் தொடங்கினார். அதுக்காக தனியா படிச்சு, டிப்ளோமா கோர்ஸ் முடிச்சு, ஸ்கூல் நிர்வாகத்தையும் கையில் எடுத்தாராம். இன்று அந்த ஸ்கூல் நல்லா போயிட்டு இருக்குது. நடிப்பு இருந்தாலும், இப்போ அவருக்கு முதல் முன்னுரிமை குழந்தைகளும், கல்வி சார்ந்த வேலைகளும்தான்.

ஒரு பக்கம் திரையில வில்லி வேடங்களில் எல்லோரையும் பயமுறுத்தியவர், நிஜ வாழ்க்கையில் ரொம்பவே அமைதியானவர். சீரியலில் திட்டி, சத்தம் போட்டு பேசினாலும், உண்மையில குழந்தைகளோட சிரிச்சு பேசும் டீச்சராக மாறிட்டார். "வில்லி நிர்மலா இப்போ ஸ்கூல் மேடம் ஆகிட்டாங்க"ன்னு சொல்லலாம் அந்த அளவுக்கு வாழ்க்கை மாறியிருக்கு.
ஒரு காலத்தில் அருணா தேவி வந்தாலே டிவியை ஆஃப் பண்ணும் ரசிகர்கள் கூட, இப்போ அவரைப் பற்றி கேள்விப்பட்டா "அவங்க இப்படி நல்ல வேலையில செட்டிலானதுக்கு சந்தோஷம்தான்"ன்னு சொல்றாங்க. வில்லி கேரக்டரால கிடைத்த புகழை தாண்டி, குடும்பத்துக்காக எடுத்த முடிவு தான் அவரை பற்றி இப்போது பேச வைத்திருக்கிறது..
சீரியல்கள்ல நெகட்டிவ் கேரக்டர் பண்ணினாலும், நிஜ வாழ்க்கையில பாசமான அம்மாவா, சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயம் செய்யும் பெண்ணா மாறியிருக்கும் அருணா தேவி, இன்று ரசிகர்களுக்கே ஒரு நல்ல எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications