Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவரச நாயகன் கார்த்திக் கேட்ட "சுடுதண்ணீர் அருவி".. சென்னையில் நயன்தாராவின் ஊட்டி அக்கப்போரு: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்குள்ளேயே ஒரு ஒற்றுமை இல்லை, அதனை சரிசெய்யாமல் ஒன்றாக இருக்கும் பெஃப்சி (Film Employees Federation of South India) அமைப்பைப் பிரிக்க எண்ணுகிறார்கள். எங்களை அழிக்க புதிதாக ஒரு அமைப்பை உருவாக்க எண்ணுகிறார்கள், அதற்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "அஜித், விஜய்யை வளர்த்துவிட்டது தமிழ் தயாரிப்பாளர்களும், தமிழ் மக்களும்தானே? இப்போது எதுக்காக, கன்னடம், தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு தன்னுடைய படங்களை தருகிறார்கள்.

Television Karthik nayanthara

ஆரம்ப காலங்களில் யார் முதுகில் சவாரி செய்தீர்களோ, அவர்களை தள்ளிவிட்டுவிட்டு, பெரிய பெரிய பண முதலைகளிடம் காசுகளை வாங்கிக்கிட்டு படம் செய்து தர ஆரம்பித்துவிட்டார்கள்..

தேனி கிராமம் செட்டிங்

ஸ்டுடியோவை எடுத்துக் கொண்டாலும் பெரிய பெரிய நடிகர்கள், ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் ஷூட்டிங் எடுக்கிறார்கள்.. தேனி கிராமத்தில் உள்ளதைதான் அங்கு செட் போட்டு எடுக்குறாங்க.. பிரைவசிக்காக இப்படி செய்தாலும், மொத்தமாக தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கிவிடுகிறார்கள்..

150 நாள் ஹைதராபாத்தில் சூட்டிங் என்றால், அங்குள்ள தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு வேலைகிடைக்காமல் போய்விடுகிறது. அன்று இந்த நடிகர்களுக்கு லைட் பிடித்தவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். பிரைவசி பிரச்சனை என்றால், பாதுகாப்புக்கு ஆட்களை கேட்டு வாங்கலாமே? எம்ஜிஆருக்கு அத்தனை பாப்புலாரிட்டி இருந்தபோது அவருக்கு பாதுகாப்பு தரப்பட்டதே? உடனே இன்னொரு மாநிலத்துக்கு போய்விடுவதா?


கேரவன் கலாச்சாரம்

காசியில் நான் கடவுள் படத்தை பாலா எடுத்ததுபோல தேவையிருக்கிறதென்றால் எங்கு வேண்டுமானாலும் சென்று எடுத்துக் கொள்ளட்டும்.. இலங்கையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் எடுத்துட்டுதானே இருக்காங்க.. தமிழ்நாட்டிலேயே ஷூட்டிங் வைத்து கொள்ளலாம் என்று அஜித், விஜய் போன்றோர்கள் சொன்னால், எத்தனையோ பேருக்கு இங்கு வேலை கிடைக்குமே? கேரவன் தர ஆரம்பித்ததிலிருந்து வந்த சனியன்தான் இதெல்லாம்..

போய் இறங்குவதற்கு தனி விமானம் கேட்கிறார்கள்.. ஒரு தயாரிப்பாளர் காசில் போய் விமானத்தில் அப்படி இறங்கணுமா? 200 கோடி, 250 கோடி காசு வாங்கறீங்களே? தனி விமானத்துக்கான காசையும் நீங்களே கட்ட வேண்டியதுதானே?

சென்னையில் ஊட்டி

ஊட்டிக்கு வர மாட்டேன்னு நயன்தாரா சொல்லவும், சென்னையிலேயே ஊட்டி செட்டிங் போடப்படுகிறது. நவரச நாயகன் கார்த்திக் அருவியில் சுடுதண்ணீர் வேண்டும் என்று கேட்கிறாரு.. ஃபால்ஸ்ஸில் குளிப்பதற்கு, எப்படி சுடுதண்ணீர் ஊற்ற முடியும்? இதெல்லாம் கேலி கூத்தாக இல்லையா? 50 கிலோ மீட்டர் வர முடியாது, மைசூரிலேயே ஃபால்ஸ் செட்டிங் போடுங்க என்கிறார் கார்த்திக். மழையில் நனையும் சீனில்கூட, பன்னீர் கேட்கிறார்கள்.

மலையாளத்தில் மோகன்லாலும், மம்முட்டியும் இங்கே வந்து ஷூட்டிங் எடுக்ககுறாங்களா? தெலுங்கில் பவன் கல்யாண், சிரஞ்சீவி சென்னையில் ஷூட்டிங் எடுக்குறாங்களா? இந்தியில் ஷாருக்கான், சல்மான்கான் இங்கே வந்து ஷூட்டிங் எடுக்குறாங்களா? தமிழ் நடிகர்கள் இனியாவது தமிழ்நாட்டில் ஷூட்டிங் வைக்க வேண்டும்.. தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு அப்போதுதான் வேலை கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+