கர்மா.. எல்லாம் வட்டியுடன் திரும்ப வரும்.. நயன்தாரா போட்ட போஸ்ட்.. தனுஷுக்கு தானா?
சென்னை: நடிகை நயன்தாரா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஸ்டோரி இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. தனுஷின் விவாகரத்தை விமர்சிக்கும் வகையில் நயன்தாரா ஸ்டோரி வைத்திருக்கிறார் என்று இணையத்தில் கமெண்ட்ஸ் குவிக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே தனுஷ் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் பெரிய அளவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை பிரிவதை யாரும் எதிர்பார்க்காத வகையில் இணையத்தில் பகிர்ந்திருந்தார் அதற்குப் பிறகு அது பற்றி அதிகமாக பேசப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்திலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு விவாகரத்து வழங்கப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் நடிகை நயன்தாரா தனுஷ் பற்றி மூன்று பக்கத்திற்கு ஒரு அறிக்கை வெளியிட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷும் நயன்தாராவும் இணைந்து நடித்திருந்தனர். அதிலிருந்து இருவருக்கும் இடையே நல்ல நட்பு காணப்பட்டது.
தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் பணமே வாங்காமல் ஒரு பாடலுக்கு நயன்தாரா டான்ஸ் ஆடி இருந்தார். இது பற்றி பல இடங்களில் தனுஷ் பெருமையாக பேசி இருக்கிறார். அதுபோல நயன்தாராவும் ஆரம்பத்தில் பல மேடைகளில் தனுஷ் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.
ஆனாலும் இவர்கள் இருவருக்கும் பிரச்சனையை உருவாக்கியது. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன நாட்களை தாண்டி இந்த திரைப்படத்திற்கு சூட்டிங் வைத்து பதினாறு கோடி வரை இழுத்து செலவழித்து விட்டார் என்றும் இதனால் விக்னேஷ் சிவன் மீது தனுஷ் கோபமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்தின் மூலமாகவே காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். அவர்களுடைய திருமணத்தின் போது டாக்குமென்டரி உருவாக்கி இருந்தனர். அதற்கு நானும் ரௌடி தான் திரைப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை பயன்படுத்துவதற்காக தனுஷிடம் என் ஓ சி கேட்டிருந்த நிலையில் தனுஷ் அதற்கான அனுமதி கொடுக்காமல் இரண்டு வருடம் இழுத்தடித்து விட்டதாக நயன்தாரா குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இதுதான் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. நயன்தாரா சமூக வலைதளத்தில் தனுஷ் பற்றி போஸ்ட் போட்ட போது அமைதியாக இருந்த தனுஷ் பிறகு நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்க இன்று நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு வைக்கிறார்.
இதுதான் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டா ஸ்டோரியில் தனுஷை மறைமுகமாக நயன்தாரா விமர்சித்துள்ளார் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள். அதாவது அந்த போஸ்டில், “கர்மா சொல்கிறது.. பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் அளிப்பீர்கள் என்றால், அதை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒரு அது ஒருநாள் உங்களுக்கே வட்டி உடன் திரும்ப வரும்” என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து ஆகி இருக்கும் வேலையில் அதை குறிப்பிட்டு தான் நயன்தாரா இப்படி பதிவு போட்டு இருக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications