'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இன்றைய எபிசோட்: மீனா கொடுத்த சர்ப்ரைஸ்! பாண்டியன் கடையில் நடந்த சண்டை!
சென்னை: விஜய் டிவியில் நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கும் குடும்ப சீரியல்களில் ஒன்றான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', இன்றைய எபிசோடில் வழக்கம்போல சண்டை, பாசம், காமெடின்னு எல்லா சுவைகளையும் கலந்து கொடுத்திருக்கு. குறிப்பா, பாண்டியன் வீட்டுல மீனா கொடுத்த அப்டேட் தான் வீட்டுக்காரர்களைச் சந்தோஷத்துல ஆழ்த்தியது!

மீனா கொடுத்த வாக்குறுதி
மீனா, இன்றைய எபிசோடில் பாண்டியன் வீட்டுக்கு வந்து ராஜியோட சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. அப்போ, ராஜியைப் பார்த்து, "நீங்க எல்லாம் இல்லாதது ரொம்ப போர் அடிக்குது!"ன்னு மீனா சொல்ல, அங்கேயே இருந்த பாண்டியன், "நான் தான் காலையிலேயே சொன்னனே... காலையில மீனா இங்க வந்து நிப்பான்னு!"ன்னு கோமதிகிட்ட கிண்டல் பண்ணார்.
உடனே மீனா ஒரு பெரிய சர்ப்ரைஸைக் கொடுத்தாங்க. "இன்னும் ஒரு மாதம் தான்! அதுக்குப் பிறகு நாங்க ரெண்டு பேரும் (மீனாவும் செந்திலும்) இங்கேயே வந்துடுவோம்!". மீனாவின் இந்த முடிவைக் கேட்டு பாண்டியன் வீட்டார் சந்தோஷத்துல இருக்க, இன்னொரு பக்கம் மீனாவும் ராஜியும் வெளியில ரோட்டுல நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, செந்திலைப் பற்றிக் கதை பேச ஆரம்பிச்சாங்க. அப்போ, தனக்குப் புதுசா போன அந்த வீடு பிடிக்கலைன்னு ராஜி கிட்ட மீனா சொல்லி வருத்தப்பட்டாங்க. இந்த நேரத்துல செந்தில் போன் பண்ணி, "காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன். நீ சாப்பிட்டியா?"ன்னு கேட்க, "நான் உங்க வீட்டுக்குப் போய் சாப்பிட்டுட்டேன்"ன்னு மீனா சொன்னாங்க!
பாண்டியன் கடையில் நடந்த சண்டை
மறுபக்கம், பாண்டியன் கடையில் நடந்த களேபரம் தான் இன்றைய எபிசோடில் இன்னொரு ஹைலைட்! பாண்டியனோட கடையில வேலை செஞ்சுகிட்டு இருந்த பழனிக்குக் கால் வலிக்குதுன்னு சொல்ல, அதைப் பார்த்த பாண்டியனும் சரவணனும் பதறி அடிச்சு ஓடுறாங்க!
அந்த நேரம் பார்த்து, கடைக்கு வந்த மயிலோட அப்பா, கல்லாவை பார்த்துட்டு, "காலையிலேயே நல்ல வியாபாரம் போல இருக்கு"ன்னு சொல்ல, கடுப்பான சரவணன் கோபத்தோட அவரைக் கடைய விட்டு எழும்பச் சொல்லிட்டு, பழனியை இருக்கச் சொல்றார்!
ஆனா, கொஞ்ச நேரம் கழிச்சு மயில் வந்து, "எனக்குக் கொஞ்சம் களைப்பா இருக்கு"ன்னு சொல்ல, உடனே பழனி எழுந்து மயிலை இருக்கச் சொன்னார்! இதைப் பார்த்த சரவணன், "சண்டையைப் போட்டு வீட்டை விட்டுப் போனதுக்குப் பிறகு, இந்தக் கடையில வந்து உட்கார்ந்துக்கிட்டு சண்டையைப் போடாதீங்க!"ங்கிற மாதிரி, பழனியைக் கடுமையாப் பேசி, வீட்டுக்கு போகச் சொல்லுறாரு! கொஞ்ச நேரம் கூட பொறுத்துக்காத இந்த 'சீட்' சண்டையால் கடை பரபரப்பா இருந்துச்சு!
கவலையில் கோமதி
அதனைத் தொடர்ந்து, கோமதி, கதிர் கிட்ட வந்து வருத்தத்துடன் பேசினார். அவங்க அம்மாவோட பிறந்தநாளுக்குப் போக முடியாதுன்னு சொல்லி, அதுக்காக ரொம்பவும் கவலைப்பட்டாங்க. "அங்க எல்லாரும் இருக்காங்க, நான் மட்டும் போகலன்னா நல்லா இருக்காது"ன்னு வருத்தப்பட்டாங்க. கதிர், கோமதியை எப்படிச் சமாதானம் செய்வாருன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்!
மொத்தத்தில், ஒரு மாசத்துல மீனா குடும்பத்தோட மறுபடியும் வீட்டுக்கு வரப் போறாங்கங்கிற பெரிய சந்தோஷம் ஒரு பக்கம் இருக்க, பாண்டியன் கடையில நடந்த இந்தச் சின்னச் சின்ன ஈகோ சண்டைகள் தான், இன்னும் சீரியலை விறுவிறுப்பாக்குது!
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications