ஐஸ்வர்யாவை பார்க்க போகும் ஜீவா- மீனா..அவமானப்படுத்தும் ஜனார்த்தனன்..தனம் கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவமனையில் விடியோ எடுத்துக் கொண்டிருந்த கண்ணன் ஐஸ்வர்யாவை முல்லை திட்டுகிறார்.

ஐஸ்வர்யா மருத்துவமனையில் இருப்பதை தெரிந்து கொண்ட ஜீவாவும் மீனாவும் அவரை பார்க்க போக வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஜீவா மீண்டும் குடும்பத்தோடு சேர்ந்து விடக்கூடாது என்று ஜனார்த்தனன் திட்டி கொண்டிருக்கிறார்.

Pandian Stores serial 2023 May 2th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மே இரண்டாம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவும் கண்ணனும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லை திட்டி எல்லாத்தையும் வீடியோ எடுத்துக்கிட்டு இருக்க என்று திட்டுகிறார். பிறகு கூலா இருங்க என்று ஐஸ்வர்யா கூறி, தொல்லை தரும் முல்லை அக்கா என்று ஒரு வீடியோ போட்டு விடலாம் என ஐஸ்வர்யா சொல்ல முல்லை கடுப்பாகிறார்.

பிறகு வெளியே வந்த கண்ணன் அங்கு இருப்பவர்களை கூட ஒரு வீடியோ எடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்க அதை கதிர் திட்டுகிறார். பிறகு அவர்களிடம் இருந்து டாக்டர் வருகிறார் என்று கூறி ஓடி விடுகிறார். அதே நேரத்தில் மீனாவும் ஜீவாவும் வீட்டில் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கடைக் கணக்கை பார்ப்பதை பார்த்து ஜனார்த்தனன் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் போனில் வீடியோவை பார்த்துக் கொண்டு மீனாவின் அம்மா ஓடிவந்து மீனாவிடம் காட்டுகிறார்.

Pandian Stores serial 2023 May 2th promo and Episode Highlights

அதில் ஐஸ்வர்யா மருத்துவமனையில் இருந்தபடியே பேசிய வீடியோ இருக்க, ஐஸ்வர்யா மருத்துவமனையில் இருக்கிறா, போய் பார்க்க வேண்டும் என்று ஜீவாவும், மீனாவும் கூறுகின்றனர். அங்கே எதற்கு போக வேண்டும் அதுதான் வீடியோவில் அந்த பொண்ணு ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டே என்று ஜனார்த்தனன் தடுத்து பார்க்க போய்தான் ஆகவேண்டும் என்று மீனாவும் ஜீவாவும் போகின்றனர். அதனால் மீனாவின் அப்பா அவருடைய மனைவியை திட்டுகிறார்.

பிறகு மருத்துவமனைக்கு வரும் மீனா ஜீவா ஐஸ்வர்யாவிடம் நலம் விசாரித்து கொண்டிருக்க ஐஸ்வர்யா என்னுடைய வீடியோ எல்லாம் பாத்தீங்களா? நல்லா இருக்கா என்று கேட்டுக் கொண்டிருக்க, மீனா கடுப்பாகி அந்த போனை உடைச்சு போடணும் என்று கூறுகிறார். பிறகு தனம் ஜீவாவிடம் நல்லா இருக்க தானே கயல் எப்படி இருக்கா என்று நலம் விசாரிக்கிறார். பிறகு ஜீவாவும் மீனாவும் கிளம்பி விடுகின்றனர்.

அடுத்ததாக மீனாவின் சித்தி மருத்துவமனைக்கு வர அதே நேரத்தில் இரவு ஆகிவிட்டது. இங்கே ஒருத்தர் தான் இருக்க வேண்டும் என்று கதிர் கூறியதால் முல்லையும் தனமும் வீட்டிற்கு போக கிளம்புகின்றனர். பிறகு எல்லோரையும் அனுப்பி வைத்து ஐஸ்வர்யாவிடம் வந்து எல்லோரும் வந்து பாத்துட்டு போற மாதிரி இவங்களும் நாலு ஆரஞ்சு பழத்தை வாங்கிட்டு வந்து பார்த்துட்டு கடமைக்கு கிளம்பி போறாங்க என்று ஐஸ்வர்யா சித்தி ஏத்தி விடுகிறார். ஐஸ்வர்யாவும் கோபத்தோடு யோசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+