Parimala and Co Review: பரிமளா & கோ எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் ப்ளூ சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, சாண்டி மாஸ்டர், மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள பரிமளா & கோ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. குடும்பம், காமெடி, சஸ்பென்ஸ், கொலை விசாரணை என பல அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், வழக்கம்போல் தனது பாணியில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
அவருடைய விமர்சனத்தில் படத்தின் கதையை மட்டுமல்ல, திரைக்கதை, காமெடி, போலீஸ் விசாரணை, கதாபாத்திர வடிவமைப்பு என அனைத்தையும் கிண்டலாக அலசியுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ
படத்தின் மையக் கதையே திரிஷ்யம் படத்தின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டதாக தோன்றுகிறது என்று கூறிய ப்ளூ சட்டை மாறன்,
"படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே இந்த படம் உருப்படப்போவதில்லைன்னு தெரிஞ்சிடுது. திரிஷ்யம் மாதிரி ஒரு கொலை, குடும்பம், போலீஸ் விசாரணை எல்லாம் இருக்கு. ஆனா அங்க இருந்த சீரியஸ்னஸ் இங்க ஒரு இடத்துல கூட இல்ல" என்று விமர்சித்துள்ளார்.
அவரின் கருத்துப்படி, திரிஷ்யம் படத்தில் மோகன்லால் குடும்பம் எப்போது மாட்டிக்கொள்ளுமோ என்ற பதற்றம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் பரிமளா & கோவில் அந்த உணர்வு ஆரம்பத்திலேயே காணாமல் போய்விடுகிறதாம்.
கதையே என்ன?
ஜெயராம் - ஊர்வசி தம்பதியருக்கு இரண்டு மகள்கள். இளைய மகளை ஒரு உள்ளூர் ரவுடி தொடர்ந்து தொந்தரவு செய்கிறான். வீட்டுக்கே வந்து மிரட்டுகிறான். குடும்பம் முழுவதும் அவனால் அவதிப்படுகிறது.
ஒரு கட்டத்தில் "இவனை உயிரோட விட்டா நம்ம நிம்மதியா வாழ முடியாது" என்ற முடிவுக்கு குடும்பம் வருகிறது. ஆனால் மறுநாள் அந்த ரவுடி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடக்கிறான். அதன் பிறகு அந்த குடும்பத்தினரே தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சந்தேகிக்க தொடங்குகிறார்கள்.
யார் கொலை செய்தது? குடும்பத்திலிருந்தே யாராவது செய்தார்களா? போலீஸ் என்ன கண்டுபிடிக்கிறது? என்பதுதான் கதையின் மையம். ஆனால் இந்த சுவாரஸ்யமான கதையை சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் ப்ளூ சட்டையின் குற்றச்சாட்டு.
"கொலையாளி யார் என்பதை விட... படம் எங்கே போகுதுன்னே தெரியல" படம் காமெடியாக தொடங்கி சீரியஸாக மாற வேண்டும் என்பதே இயக்குநரின் திட்டமாக இருந்திருக்கலாம் என கூறும் ப்ளூ சட்டை, "காமெடியா ஆரம்பிச்சு சீரியஸா போகணும்னு நினைச்சிருக்காங்க. ஆனா ஸ்பூஃபா ஆரம்பிச்சு ஸ்பூஃபாவே முடிஞ்சிருச்சு" என்று கலாய்த்துள்ளார்.
கதையில் கொலை நடக்கிறது. போலீஸ் விசாரணை வருகிறது. மர்மம் உருவாக்கப்படுகிறது. ஆனால் எந்தக் காட்சியும் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணையா? பஜ்ஜி கடையா?
படத்தில் போலீஸ் விசாரணை முக்கிய அம்சமாக இருக்க வேண்டிய நிலையில், அந்த அதிகாரியின் நடவடிக்கைகள் சிரிப்பை கூட வரவழைக்கவில்லை என மாறன் கூறுகிறார்.
"போலீஸ் அதிகாரி கொலை வழக்கை விசாரிக்கிறாரா இல்ல பஜ்ஜி சாப்பிட வர்றாரான்னு தெரியல. போண்டா, பஜ்ஜி, பானி பூரி சாப்பிடுறதுலதான் அதிக கவனம்" என்று அவர் கிண்டலடித்துள்ளார். ஒரு கொலை வழக்கின் தீவிரம் பார்வையாளர்களுக்கு கடத்தப்பட வேண்டிய இடத்தில், காட்சிகள் வேறு திசைக்கு சென்று விடுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
படத்தின் குறை
படத்தின் மிகப்பெரிய முரண்பாடாக அவர் சுட்டிக்காட்டியது வில்லன் கதாபாத்திரம். முழுப் படத்திலும் குடும்பத்தை கொடுமைப்படுத்தும் நபராக காட்டப்படும் அந்த ரவுடி, இறந்த பிறகு திடீரென பரிதாபப்பட வேண்டிய கதாபாத்திரமாக மாறுகிறாராம்.
"கொல்லப்பட வேண்டியவனா காட்டுறாங்க. கொன்ன பிறகு அவனை நியாயப்படுத்துறாங்க. கதை எடுத்தவங்களுக்கே கதை புரியல போல" என்று அவர் கூறியுள்ளார்.
யோகி பாபுவின் காமெடி
படத்தில் யோகி பாபு இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை என்கிறார் ப்ளூ சட்டை. "யோகி பாபு அடிக்கிற காமெடிக்கு சிரிப்பு வரல. கோபம்தான் வந்தது" என்று அவர் நேரடியாக கூறியுள்ளார்.
கடைசி 10 நிமிடத்தில் வந்த கருத்தூசி
படம் முழுவதும் ஒரு பாதையில் சென்று, இறுதியில் திடீரென ஒரு சமூக கருத்தை சொல்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
"இரண்டரை மணி நேரம் கதையை எங்கெங்கோ கூட்டிட்டு போயிட்டு கடைசி 10 நிமிஷத்துல ஒரு கருத்தை சொருகுறாங்க. அது கருத்து இல்ல கருத்தூசி" என்று அவர் கலாய்த்துள்ளார்.
டைட்டிலே தப்பா இருக்கு
ப்ளூ சட்டையின் விமர்சனத்தில் அதிகமாக வைரலாகி வரும் பகுதி இதுதான். "பரிமளா & கோன்னு டைட்டில் வச்சிருக்காங்க. யாரு பரிமளான்னு கேட்டா ஜெயராம்தான் பரிமளாங்கறாங்க. ஏன் அந்த பேர்னு கேட்டா அதுக்கு காரணமே இல்ல. டைட்டிலே தப்பா இருக்கு" என்று அவர் கூறியுள்ளார்.
ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஒருபுறம் ப்ளூ சட்டை மாறன் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தாலும், சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சிலர் ஜெயராம் - ஊர்வசி கூட்டணியையும் குடும்ப காட்சிகளையும் பாராட்டி வருகின்றனர். மற்றொரு தரப்பு ரசிகர்கள், "பாண்டிராஜ் படம்னு போனோம்... திரிஷ்யம் மாதிரி சஸ்பென்ஸ் எதிர்பார்த்தோம்... ஆனால் வேற மாதிரி படம் கிடைச்சிருக்கு" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதல் நாள் வசூலாக சுமார் ரூ.1.19 கோடி வரை படம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வார இறுதியில் படத்தின் நிலை என்னவாகும் என்பதே தற்போது திரையுலகின் கவனமாக உள்ளது.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி... "திரிஷ்யம் எடுக்க நினைச்சு... ஸ்பூஃப் படம் எடுத்துட்டாங்க!" என்ற ப்ளூ சட்டை மாறனின் ஒரு வரி விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!














Click it and Unblock the Notifications