பிரியா மணி இப்போ ரொம்ப ஃப்ரீ.. வெப் சீரிஸுக்குத் தாவினார் "முத்தழகி"!
பெங்களூர்: ஒரு காலத்தில் பெரிதாக பேசப்பட்டவர் பிரியாமணி. பருத்தி வீரன் அவருக்கு பெரிய சவாலாகவும், கூடவே சாதகமாகவும் மாறி அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டது.
ஆமாங்க, கவர்ச்சிகரமான உடல் வாகு இருந்தும், அதை வெளிப்படுத்தி வேட்டையாட முடியாத அளவுக்கு பருத்தி வீரன் படத்தின் இமேஜ் பிரியா மணியை முடக்கிப் போட்டு விட்டது. என்னதான் அவருக்கு அது விருதுகள் எல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் கூட அதைக் கொண்டாட முடியாத மன நிலைக்குப் போய் விட்டார் பிரியாமணி.
விளைவு அவர் படம் ஏதுமில்லாமல் ஒதுங்கி வீட்டோடு முடங்க வேண்டிய நிலை. இந்த நிலையில்தான் கல்யாணத்தை முடித்துக் கொண்டு செட்டிலாகி விட்டார். இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஆனால் சினிமாவில் அல்ல வெப் சீரிஸில்.

இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் இமயம் பாரதிராஜா கண்டுபிடித்த அற்புதமான நடிகை ப்ரியாமணி. அவருக்கு குரல் பிளஸாக இருந்தாலும், என்னவோ பருத்திவீரன் தவிர வேறு படங்களில் டப்பிங்தான். ஏன் என்று கேட்டால், என்னவோ டப்பிங் பேசுவது எனக்கு இயல்பா வரலை சொல்லப் போனால் அது எனக்கு கஷ்டம்தான்.என்று கூறி இருக்கிறார்.
|
வெப் சீரீஸ்
முன்பெல்லாம் டிவி தொடர்கள்தான் பிரபலம். இப்போது அவற்றை ஓரம் கட்ட ஆரம்பித்துள்ளன வெப் சீரிஸ் எனப்படும் தொடர்கள். பல்வேறு பிரபலங்களும் கூட இதில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நிறையவும் சீரிஸ்கள் வர ஆரம்பித்துள்ளன. நெட் பிளிக்ஸ், அமேஸான் பிரைம் என வெப் சீரிஸ்கள் ஒளிபரப்பாகாத ஆப்களே இல்லை எனலாம்.

இதில் பிரியாமணியும்
அந்த பாரம்பரியப்படி இப்போது பிரியா மணியும் வெப் சீரிஸ் பக்கம் வந்து விட்டாருங்க. அவர் மட்டும் வரலீங்க, பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாயும் பிரியா மணியுடன் கை கோர்த்துள்ளார் The Family Man என்ற வெப் சீரிஸுக்காக. அமேஸாகன் பிரைம் வீடியோவில் இந்த தொடரைப் பார்க்கலாம். முதல் சீசனில் பத்து எபிசோடுகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளனராம்.

தீவிரவாத எதிர்ப்பு
இந்த வெப் சீரிஸில் தீவிரவாத எதிர்ப்புப் படை வீரராக நடித்துள்ளார் மனோஜ் பாஜ்பாய். எனவே அதிரடியான ஆக்ஷன் சீன்களுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லை என்று நம்பலாம். இதுதான் மனோஜ் பாஜ்பாய்க்கு முதல் வெப் சீரிஸாம். எனவே திரில்லாக இருந்ததாம் நடித்தபோது, இந்தத் தொடரில் ஸ்ரீகாந்த் திவாரி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் மனோஜ்.

தாயாக பிரியாமணி
மனோஜ் பாஜ்பாய் மனைவி வேடத்தில் வருகிறார் நம்ம பிரியாமணி. சுசித்ரா திவாரி என்பது இவரது பெயர். 2 குழந்தைகளின் தாயாக இதில் நடித்துள்ளார். இந்தத் தொடரை இயக்கி தயாரித்துள்ளார்கள் ராஜ் நிடிமோரு, கிருஷ்ணா டிகே. உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக இந்த தொடர் இருக்கும் என்று இந்த இரட்டை இயக்குநர்கள் கூறியுள்ளனர்.
பிரியாமணியை மிஸ் செய்கிறோமே என்று பலரும் நினைத்தனர். இப்போது புதிய அவதாரத்தில் வருகிறார் நம்ம முத்தழகு. பிறகென்ன சப்ஸ்கிரைப் செய்து பிரியா மணியின் நடிப்பை ரசிக்கலாமே மக்களே..












Click it and Unblock the Notifications