அப்பா முன்னாடி ஆடை இல்லாமல்.. அத போய் அங்க.. விஷ்ணுகாந்த் மீது சம்யுக்தாவின் குற்றச்சாட்டு
சென்னை: சீரியல் நடிகை சம்யுக்தா தன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் மீது புது குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
அதில் தன்னுடைய அம்மா, அப்பாவை விஷ்ணுகாந்த் எப்போதும் மதித்ததே இல்லை அவர்களை அவமானம் தான் படுத்தி இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.
அதோடு தன்னுடைய அப்பா வீட்டிற்கு வருவது எதற்காக விஷ்ணுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தையும் கூறியிருக்கிறார்.

சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு தற்போது சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் குடும்ப பிரச்சனை தெரிந்த விஷயமாகத்தான் இருக்கும். இவர்கள் இருவரும் சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணமும் செய்து இருந்த நிலையில் திருமண வாழ்க்கை இரண்டு மாதத்திற்குள் முடிவுக்கு வந்திருக்கிறது.
இரண்டு மாதங்களுக்குள் தாங்கள் அனுபவித்த வேதனை கஷ்டங்கள் என்று இருவரும் மாறி மாறி பல ரகசியங்களையும், குற்றசாட்டுகளையும் கூறிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது சம்யுக்தா youtube சேனல் ஒன்றில் தன்னுடைய அப்பா என்னை பார்க்க வருவது விஷ்ணுகாந்த்க்கு கொஞ்சம் கூட பிடிக்காது.
அதற்கு காரணம் என்னவென்றால், கல்யாணத்துக்கு பிறகு என்னுடைய அப்பா எனக்கு ஏதாவது கொண்டு வருவார். அடிக்கடி என்னை பார்க்க எங்க வீட்டுக்கு வருவார். அது விஷ்ணுகாந்த்க்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. எனது அப்பா வருவதால் பிரைவசியே போச்சு என்று விஷ்ணுகாந்த் குற்றம் சொல்லி வருகிறார்.
விஷ்ணுகாந்த் 24 மணி நேரமும் பாலியல் உறவு பற்றிய மனநிலையில் மட்டுமே இருப்பதால் அவருக்கு எங்க அப்பா வருவது தொல்லையாக தெரிந்திருக்கிறது. அதைப் பற்றி ஒரு சம்பவத்தை நான் இப்போது சொல்ல நினைக்கிறேன். எனக்கும் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் முதலில் போலீஸ் நிலையம் சென்றோம். அப்போது, எங்களை சமாதானப்படுத்தி மீண்டும் சேர்ந்து வாழ வைத்து விட வேண்டும் என்று போலீசார் நினைத்தாங்க.

அப்போது விஷ்ணுகாந்த், சில குற்றச்சாட்டுகளை எங்க அப்பா மீது வைத்தார். அதாவது, விஷ்ணுகாந்த்தும், நானும் நெருக்கமாக இருக்கிற டைம்ல அப்பா வந்து அடிக்கடி டிஸ்ட்ரப் பண்றாரு. அப்புறம் எப்படி அவளுக்கு புருஷன் மேல பாசம் வரும்ன்னு விஷ்ணுகாந்த் போலீசில் சொன்னாரு. அத்தோட விடல. எங்க அந்தரங்க விஷயம் வரை போலீசில் சொல்லிட்டாரு.
என்ன சொன்னாரு தெரியுமா (சம்யுக்தா கண்களில் இதை சொல்லும்போது கண்ணீர்) "அவங்க அப்பா வரும்போது நானும் அவளும் ஒண்ணா இருந்தோம். அப்போ டிரஸ் இல்லாம இருந்தா, அப்போ பார்த்து அவுங்க அப்பா வராரு. அதனால பெட்ரூம்லயே சம்யுக்தா அப்படியே இருந்துவிட்டார், நான் மட்டும் போயிட்டு மாமனாரை பார்த்து வழியனுப்பி வைத்துவிட்டு வந்தேன். இது எனக்கு தொல்லைதானே" இப்படி பெண் எஸ்.ஐ.கிட்ட விஷ்ணுகாந்த் சொன்னாரு. இது ச்சீப்பா இல்லையா?
இதுதான் எனக்கு பெரிய கோபமாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் சொன்னது முதலில் அவர்தான். என்னுடைய அப்பா இல்லை என்று தான் அவர் என்னை திருமணம் செஞ்சதா ஒரு youtub சேனலில் பேட்டி கொடுக்கும் போது கூட சொல்லி இருந்தாரு.

அப்பா இல்லாத பொண்ணுனா என்ன வேணாலும் பண்ணலாம் என்று நினைத்து இருப்பாரு போல. ஆனால் கருத்து வேறுபாட்டால் பிரிஞ்சி இருந்த எங்க அப்பா மீண்டும் சேர்ந்ததை விஷ்ணுகாந்தால ஏத்துக்க முடியல. அதனால தான் அவர் எங்க பற்றி தப்பு தப்பா யூடியூப் சேனல்களில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சம்யுக்தா கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications