Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sathyaraj: சிவாஜி படத்தில் நடிக்காத காரணமே இதுதான்! ரஜினியோடு கோபம்? ஓபன் ஆக பேசிய சத்யராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சத்யராஜ், தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், ரஜினிகாந்தின் படங்களில் வில்லனாக நடித்துப் பிரபலமானவர். பின்னர், ஹீரோவாக உயர்ந்து, ரஜினியுடன் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். ரஜினியைப் பற்றி அவர் கடுமையாக விமர்சித்ததாகவும், 'சிவாஜி' படத்தில் வில்லனாக நடிக்க மறுத்ததாகவும் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது சத்யராஜ் அதற்கு விளக்கமளித்துள்ளார்.

Sathyaraj Rajinikanth

சத்யராஜின் ஆரம்பகால வாழ்க்கை

சத்யராஜ் சினிமாவில் நடிக்க வந்த புதிதில், வில்லனின் அடியாட்களில் ஒருவராகவே அதிகம் நடித்தார். அவருக்குப் பெரும்பாலும் 'எஸ் பாஸ்' என்ற ஒரு வசனம் மட்டும்தான் கிடைக்கும். அவரது திரை வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குனர் மணிவண்ணன். மணிவண்ணன் இயக்கிய 'நூறாவது நாள்' திரைப்படம், சத்யராஜை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. மணிவண்ணன்தான் சத்யராஜுக்கு ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி, அவரை ஒரு தனித்துவமான நடிகராக மாற்றினார்.

ரஜினி - சத்யராஜ் உறவு

ரஜினியின் 'மிஸ்டர் பாரத்' படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்திருப்பார் சத்யராஜ். ரஜினியின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் ரஜினியின் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். "நாங்க கஷ்டப்பட்டு நடிப்போம்... ஆனால், அவர் வந்து ஸ்டைலா ஏதாவது பண்ணிட்டு பேர் வாங்கிட்டு போயிடுவாரு" என்று நண்பர்கள் வட்டாரத்தில் கூறி, ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்புகளை மறுத்து வந்ததாகச் செய்திகள் வெளியானது.

சிவாஜி பட சர்ச்சை

ஏவிஎம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய 'சிவாஜி' படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜுக்கு வாய்ப்பு வந்தபோது, அவர் மறுத்துவிட்டார். அப்போது, "நான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பாரா?" என்று கேட்டதாகப் பல தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது சத்யராஜ் ஒரு நேர்காணலில், "நான் அப்போது மார்க்கெட் குறைந்த ஒரு ஹீரோவாக இருந்தேன். ஒரு படம் ஹிட் அடித்து மீண்டும் ஹீரோவாகத் தாக்குப்பிடிக்க வேண்டும் என்று தடுமாறி இருந்த நிலை அது. அந்த சமயத்தில் வில்லனாக நடித்தால், மீண்டும் வில்லனாக மட்டுமே கூப்பிடுவார்கள் என நினைத்துதான் 'சிவாஜி' பட வாய்ப்பை மறுத்தேன். ஆனால், மீடியாவில் என்னென்னவோ சொல்லிவிட்டார்கள்" என்று விளக்கமளித்துள்ளார்.

செய்யாறு பாலுவின் விளக்கம்

செய்யாறு பாலுவும் ஒருமுறை ரஜினி - சத்யராஜ் குறித்துப் பேசியுள்ளார். "சத்யராஜ் ஹீரோவாகக் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தபோது, ரஜினி அவருக்கு ஒரு பட வாய்ப்பு கொடுத்தார். அப்போது ரஜினி, 'சத்தியம், இந்த படம் உன்னை ஹீரோவா நிலைநிறுத்திவிடும். நீ நல்லா வரணும்னு தான் நான் இந்த வாய்ப்பை கொடுக்கிறேன்' என்று சொன்னார். அதன் பிறகு சத்யராஜ் வெற்றிபெற்றதும், அவர் ரஜினியுடன் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்" என்று செய்யாறு பாலு தெரிவித்திருந்தார்.

கூலி படம் - நட்பு மீண்டும் இணைந்தது

அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் வெளியான 'கூலி' படத்தில், ரஜினியின் நண்பராக நடித்திருக்கிறார் சத்யராஜ். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "சிவாஜி படத்தில் எனக்கு நிகரான சம்பளத்தைக் கொடுப்பதாகச் சொல்லியும் சத்யராஜ் நடிக்கவில்லை. ஆனால், இந்த படத்தில் என்னோடு நடித்திருக்கிறார்" என்று ரஜினி பேசியது, இருவருக்கும் இடையே இருந்த புரிதலைக் காட்டியது. ரஜினி மற்றும் சத்யராஜ் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+