"தவறாக” அந்த இடத்தில் கை வைத்த கதாநாயகன்.. நிஜத்தில் "பளார்” விட்ட நடிகை.. இவங்கள ஞாபகம் இருக்கா?
சென்னை: ஹிந்தியில் மிகவும் பிரபலமான "தியா ஆர் பாத்திகம்" என்ற சீரியல் தமிழில் டப் செய்யப்பட்டு என் கணவன் என் தோழன் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த சீரியல் ரசிகர்களில் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தான் இதே கதையை வைத்து ராஜா ராணி சீசன் 2 எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் என் கணவன் என் தோழன் சீரியலில் கதாநாயகியாக நடித்த தீபிகா சிங் அந்த சீரியல் கதாநாயகனோடு ஏற்பட்ட பிரச்சனையால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அவருடன் பேசாமலே சீரியலில் நடித்து முடித்து இருக்கிறார்.
தற்போதைய சூழ்நிலையில் பல சீரியல்கள் பிறமொழி சீரியல்களின் தழுவலாகவே இருந்து வருகிறது. அதிலும் ஒரு சில சீரியல் தமிழ் ரசிகர்களின் மனதை அதிகமாக கவர்ந்து இருக்கிறது. அந்த வகையில் ஒரு சீரியல்தான் என் கணவன் என் தோழன் சீரியல் இந்த சீரியல் ஹிந்தியில் தியா ஆர் பாத்திரகம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது.

இந்த சீரியலில் நடித்த நடிகை பெயர் தீபிகா சிங் தான். இவர் முதல் முதலாக இந்த சீரியல் தான் அறிமுகமாகி இருந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு முதல் சீரியல் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. அதிலும் அவருடைய நடிப்பு இப்போதும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. காரணம் தன்னுடைய மாமியார் ஐபிஎஸ் கனவை நிறைவேற்ற முடியாமல் எவ்வளவோ பிரச்சனை கொடுத்தாலும் அதில் எல்லாம் போராடி அவர் கடைசியில் தன்னுடைய லட்சியத்தை அடைந்திருப்பார்.
அதுபோல தான் என்னதான் படித்து தான் நினைத்த வேலையை பார்த்தாலும் தன்னுடைய கணவர் மீது தனக்கு இருக்கும் பாசத்தையும் அடிக்கடி வெளிகாட்டி இருப்பார். இதனாலேயே இவருக்கு தமிழிலும் அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இந்த சீரியலில் நடிக்கும் போதே இவர் இந்த சீரியலை டைரக்ட் செய்த டைரக்டரை தீபிகா சிங் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஹிந்தி சீரியல் நடிகையான தீபிகா சிங் ஒரு விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தாராம். அப்போது அவருடைய கன்னம் எல்லாம் சிவந்து அழுததைப் போன்று இருந்ததாம். முகமும் ரொம்பவே டல்லாக இருந்ததால், அப்போது சில பத்திரிகையாளர்கள் அவர் அந்த விழாவிற்கு குடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்று வதந்திகளை கிளப்பி இருந்தாராம். ஆனால் உண்மையில் தீபிகா சிங் அடுத்தடுத்து ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் டயர்ட் ஆக இருந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அதுபோல அவர் நடித்த சீரியலில் கதாநாயகனாக கணவர் கேரக்டரில் நடித்த அனஸ் ரசீதுடன் ஏகப்பட்ட மனகசப்பிலும் இருந்திருக்கிறார். ஒருமுறை இந்த சீரியல் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது அந்த நடிகர் தீபிகா சிங்கின் "பின்பகுதியை" பிடிக்கும்படியான காட்சி இருந்ததாம். ஆனால் அவர் தவறுதலாக "முன்பகுதியை" பிடித்து விட்டாராம்.

உடனே தீபிகா சூட்டிங் ஸ்பாட்டிலே அந்த நடிகரை பளார் என்று அறைந்து இருக்கிறார். அதற்கு பிறகு அந்த நடிகர் தெரியாமல் நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று கூறினாராம். ஆனாலும் சுமார் இரண்டு வருடங்களாக அவரோடு பேசாமலே என் கணவன் என் தோழன் சீரியலை தீபிகா சிங் நடித்து முடித்து இருந்தாராம்.












Click it and Unblock the Notifications