Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செவ்வந்தி, வாணி ராணி சீரியல் இயக்குனர் ரத்தினம் மனைவி தற்கொலை.. திடுக்கிடும் காரணம்..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் இயக்குனர் ஓஎன் ரத்தினம் மனைவி இன்று திடீரென தற்கொலை செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் ரத்னம் மற்றும் அவருடைய மனைவி காதலித்து திருமணம் செய்திருந்தார்களாம்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரவி வருகிறது.

Sevvanti, Vani Rani serial director Rathinams wife commits suicide

சன் டிவியில் பல ஹிட்டான சீரியல்களின் இயக்குனரான ஓஎன் ரத்தினம் மனைவி இன்று சென்னையில் தற்கொலை செய்து கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் ரத்தினம் அழகு, வாணி ராணி, செவ்வந்தி, பிரியமான தோழி, பாண்டவர் இல்லம் என பல ஹிட்டான சீரியல்களை இயக்கியவர் தான்.

இயக்குனர் ரத்தினத்தின் மனைவி பெயர் பிரியாவாம். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்களாம். ஓஎன் ரத்தினத்தின் சொந்த ஊர் பொள்ளாச்சி தானாம். இவரது மனைவியும் அதே ஊர் தானாம். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார்களாம். திருமணம் ஆகி சுமார் 10 ஆண்டுகள் தான் ஆகி இருக்கிறதாம்.

இந்த நிலையில் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் இருவரும் தாத்தா வீட்டிற்கு பொள்ளாச்சிக்கு செஞ்சிருந்தார்களாம். அதே நேரத்தில் ரத்தினமும் அவருடைய மனைவியும் மட்டும்தான் சென்னையில் உள்ள வீட்டில் இருந்தார்களாம். இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே சின்ன வாக்குவாதம் நடை பெற்றது என்று சிலர் கூறுகின்றனர்.

விடுமுறைக்கு தாத்தா வீட்டிலிருந்த மகன்கள் இன்று அதிகாலையில் தான் சென்னை திரும்பி இருக்கிறார்கள். அவர்களை கூப்பிட்டு வர ரத்தினம் இன்று அதிகாலை பேருந்து நிலையத்துக்கு சென்ற நேரத்தில் தான் பிரியா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. தற்போது பிரியாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் ரத்தினமும் அவருடைய மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் பிரியா வீட்டில் கல்யாணத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய போது இவரை கல்யாணம் செய்ய முடியலன்னா தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி அடம்பிடித்து இருந்தார் என்றும் அதனால் ஒரு கட்டத்தில் இரண்டு வீட்டிலும் சம்மதம் சொல்லி இருவருக்கும் திருமணம் நடந்தது என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இவ்வளவு போராடி திருமணம் செய்த நிலையில் இப்படி ஒரு நிலைமையா? என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+