Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: தன் நிஜ பிளாஷ்பேக் கதையை சொன்ன ரோகிணி! அழுத மீனா, உண்மையை கண்டுபிடித்த முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில், மீனா மற்றும் ரோகிணியின் தனிப்பட்ட உணர்வுகளும், ரகசியங்களும் பெரும் அதிர்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தின. வீட்டில் நடந்த சமையல் குழப்பம்தான் இந்தப் பெரிய உணர்ச்சிப் போராட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

Siragadikka aasai serial vijay tv

குழப்பத்தில் மீனா

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், வழக்கம் போல மீனா தான் சமைத்த உணவுகளை வீட்டாருக்குப் பரிமாறத் தொடங்கினார். அப்போது ரோகிணியும் மீனாவுக்கு உதவ முன்வந்தார். ஆனால், விஜயா மீனா எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வாள், நீ வந்து சாப்பிடு என்று சொல்லவும், ரோகிணி அதை மறுத்து, "இல்லை, நான் மீனாவுக்கு உதவி செய்கின்றேன்" என்றார். இதைக் கேட்ட ஸ்ருதி, "மீனா தானே எப்போதும் பரிமாறுவாங்க, நீங்க என்ன புதுசா அவங்களுக்கு ஹெல்ப் பண்றீங்க?" என்று கிண்டலாகக் கேட்டார்.

அனைவரும் சாப்பிட அமர்ந்தபோதுதான் விசித்திரம் தெரிந்தது. சாப்பாட்டில் உப்பு, புளி, காரம் எல்லாம் வித்தியாசமாக இருக்க, யாராலும் ஒரு வாய் கூடச் சாப்பிட முடியவில்லை. இதனால் மீனாவுக்கு என்ன நடந்தது என்று எல்லாரும் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது அண்ணாமலை பரிவுடன், "உடம்பு சரியில்லையா?" என்று கேட்க, முத்து மீண்டும் மீண்டும் மீனாவை வற்புறுத்தினார். "மீனாவுக்கு மனசுதான் சரியில்லை போல, ஏதோ என்னிடம் மறைக்கின்றார். என்ன விஷயமாக இருந்தாலும் சொல்லு, உனது முகத்தைப் பார்த்தாலே எல்லாம் தெரிகிறது" என்று முத்து கேட்க, மீனா ஒன்றும் இல்லை என்று மறுத்துவிட்டார்.

ரோகிணியின் மிரட்டல்

சமையல் குழப்பத்திற்குப் பின், கிச்சனுக்குச் சென்ற மீனா, தான் உண்மையைச் சொல்லப் போவதாக ரோகிணியிடம் சொல்கிறார். இதைக் கேட்ட ரோகிணி, "நீங்கள் உண்மைய சொன்னால் நான் இப்பொழுதே எனது கையை அறுத்துக் கொள்வேன்" என்று மீனாவைப் பயங்கரமாக மிரட்டினார். ரோகிணியின் மிரட்டலால் குழப்பமடைந்த மீனா, தனியாக மாடியில் சென்று அழுதுகொண்டிருந்தார்.

ரோகிணியின் பிளாஷ்பேக்

மாடியில் அழுதுகொண்டிருந்த மீனாவைப் பார்த்த ரோகிணி, "எதற்காக இப்படி அழுகிறீர்கள்?" என்று கேட்க, மீனா வெடித்துக் கலங்கினார். "நீங்க இரண்டு வருஷமா எல்லாரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கீங்க. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியல" என்று ரோகிணியிடம் கோபப்பட்டு கத்துகிறார்

இதைக் கேட்ட ரோகிணி, "எனது வாழ்க்கையில் உண்மையாக என்ன நடந்தது என்று தெரிந்திருந்தால் நீங்கள் இப்படிப் பேசி இருக்க மாட்டீங்க" என்று கூறி, தனது சோகமான பிளாஷ்பேக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்: தான் படித்துக்கொண்டிருந்த போது, வீட்டில் கடன் தொல்லை அதிகமாக இருந்தது. தான் படித்து அந்தக் கடன்களை அடைக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், என்னுடைய அப்பா வேலை செய்யும் இடத்தில் உள்ள முதலாளியின் தம்பியை எனக்குத் திருமணம் முடிக்கக் கேட்டார்கள். எனக்கு அவரைவிட 15 வயது வித்தியாசம் இருந்ததால் நான் மறுத்தேன். ஆனாலும் அப்பா கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைத்தார்.

கல்வி மறுக்கப்பட்டது

திருமணம் நடந்த மறுநாள் எனக்கு எக்ஸாம் இருந்தது. அதற்காக நான் படித்துக்கொண்டிருந்தேன். ஆனால், எனது கணவர் எனது புத்தகங்களைத் தூக்கி எறிந்து என்னைப் படிக்க விடாமல் தடுத்தார். மேலும், என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை அவர் தொட்டார். அதன்பிறகு அடுத்த நாள் நான் அவருக்கு காபி கொண்டு போனேன் அப்போது அவர் கையில் மது பாட்டில் ஒரு உட்கார்ந்து இருந்தார். அப்போதுதான் அவருக்குக் குடிப்பழக்கம், போதைப் பழக்கம் இருப்பது தெரியவந்தது.

சோக முடிவு

மூன்று மாதம் அவரோடு வாழ்ந்தேன் அந்த மூன்று மாதமும் நான் நரக வேதனை தான் அனுபவித்துக் கொண்டு இருந்தேன். நான் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவர் மது போதையில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மூன்றே மாதங்களில் எனது வாழ்க்கை முடிந்தது. அதன் பின்பு அவரது குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் கொடுத்து, "இனிமேல் இந்தக் குடும்பத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை" என்று என்னைத் துரத்திவிட்டார்கள் என்று தனது சோகமான கதையைக் கூறி முடித்தார்.

ரோகிணியின் இந்தப் பிளாஷ்பேக் கதை, அவர் ஏன் இந்த ரகசியங்களை மறைத்து வாழ்கிறார் என்பதற்கான வலுவான காரணத்தை இன்றைய எபிசோடில் வெளிப்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+