Siragadikka Aasai: சீரியல் நடிகை தற்கொலை! இறுதி சடங்கில் பார்த்த காட்சி! எமோஷனலாக பேசிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த நடிகை ராஜேஸ்வரி நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பழனியப்பன், ராஜேஸ்வரி இறப்பு பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார்.
சீரியல் நடிகை ராஜேஸ்வரி சிறகடிக்க ஆசை சீரியலில் மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலிலும் பாக்கியாவின் ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணாக நடித்து இருந்தார். ராஜிக்கு சிறகடிக்க ஆசை சீரியலுக்கு பிறகு அவருக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தில் தான் இவர் தவறான முடிவு எடுத்திருக்கிறார்.

இதுகுறித்து சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பழனியப்பன் வெளியிட்ட வீடியோவில் பேசும் போது, நேற்று இறந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி என்னுடைய நண்பர். அவங்க ஏற்கனவே என்கூட சில வெப் சீரிஸிலும் நடிச்சிருக்காங்க, சீரியலிலும் படித்திருக்கிறோம். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட நிறைய ரீல்ஸ் எடுத்து இருக்கிறோம். அவர் இப்போ எடுத்திருக்கிற முடிவு ரொம்ப கஷ்டப்படுத்துது.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கலாம். அல்லது யாரிடமாவது மனது விட்டு பேசி இருக்கலாம். ஏன் இப்படி பண்ணுங்க என்று தெரியல. சிறகடிக்க ஆசை சீரியலுக்குப் பிறகு ராஜிக்கு நிறைய வாய்ப்பு வந்துட்டு இருந்து. இந்த நேரத்தில் இவர் இப்படி தற்கொலை பண்ணி இருக்கனுமா என்று வருத்தமாய் இருக்கு.
நேற்று அவருடைய இறுதி சடங்குக்கு போயிருந்தேன். அங்கு அவருடைய குடும்பத்தை பார்க்கும் போதும் வருத்தமாய் இருக்கு. அவருக்கு காலேஜ் முடித்த மகன் இருக்கிறான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொண்ணு இருக்கிறது. அவர்களை எல்லாம் விட்டுட்டு போகணுமா? 39 வயசு எல்லாம் ஒரு வயசா? இந்த வயசுலயே இவங்க இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாங்களே! இவங்க இன்னும் நிறைய நடிச்சு சாதித்து இருக்கணும் என்று உருக்கமாக பழனியப்பன் பேசி இருந்தார்.
மேலும் அவர் பேசும் போது, நான் எல்லாருக்கும் சொல்லுற விஷயம் ஒன்று தான். அது நடிகர் நடிகைகள்னு இல்ல, எல்லாருக்கும் குடும்ப பிரச்சினைகள் இருக்கு. வேலை பாக்குற இடத்துல பிரச்சனை இருக்கு. அதற்கெல்லாம் தற்கொலை தீர்வாகாது. இந்த உலகத்தில் பிரச்சனை இல்லாத ஆட்களே இல்லை. அதற்கு உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டும். உயிரை எடுத்துக்குற சக்தி கடவுளுக்கு மட்டும் தான் இருக்கு, அதை யாரும் இப்படி பண்ணாதீங்க என்று வருத்தத்தோடு பேசி இருக்கிறார். அதுபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த கம்பம் மீனாவும் ராஜுடைய இழப்பு குறித்த வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications