சிறகடிக்க ஆசை: முத்து, மீனாவை வீட்டை விட்டு துரத்தும் விஜயா.. அண்ணாமலை இப்படி முடிவெடுத்துட்டாரே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து மற்றும் மீனாவை விஜயா வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். அதற்கு முத்துவும் மீனாவும் வீட்டை விட்டு கிளம்ப ரெடி ஆகின்றனர்.
அதே நேரத்தில் வீட்டை விட்டு வெளியே போகும் முத்து தன்னோடு அண்ணாமலையையும் கூப்பிட அதை பார்த்து விஜயா அதிர்ச்சியாகிறார். அதற்கு அண்ணாமலை அதிரடியான பதிலை கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் முத்துவை எப்படியாவது கோபப்படுத்த வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருந்த வாசுதேவன் கண்ணில் மீனா ஸ்ருதி கழட்டி போட்ட மாலையை எடுத்து பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அந்த மாலையோடு ஸ்ருதி தங்க செயினோடு கழட்டி போட்டு இருப்பதால் இது வேறு யாரும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மீனா அந்த மாலையில் இருந்து செயினை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து மீனாதான் அந்த செயினை திருடுவதற்கு முயற்சி செய்தார் நாங்கள் கண்ணால் பார்த்தோம் என்று வாசுதேவனும் சுதாவும் பிரச்சனை செய்கின்றனர்.

ஆனால் இதையெல்லாம் கேட்டு விஜயா எதுவும் சொல்லாமலே வாயை மூடிக்கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் முத்து மீனாவுக்கு ஆதரவாக ஆரம்பித்ததில் அமைதியாக பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் வாசுதேவன் பேசுவதை பொறுக்க முடியாமல் வாசுதேவனை போட்டு அடித்து விடுகிறார். இதனால் கோபமான ஸ்ருதி இனி நான் முத்து இருக்கும் வீட்டிற்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறார். இப்படியாக எபிசோடு இருக்கும் நிலையில் தற்போது வரும் நாட்களுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் வீட்டில் கோபமாக இருக்கும் விஜயா, முத்து மற்றும் மீனா வீட்டிற்குள் வரும்போது இனி இந்த மீனாவும் முத்துவும் வீட்டுக்குள் இருக்கக் கூடாது. இவங்க வீட்டை விட்டு போனாதான் ஸ்ருதியும் ரவியும் வீட்டிற்குள் வருவாங்க. அதனால நீங்க வீட்டை விட்டு வெளியே போங்க என்று கோபமாக பேச அதற்கு முத்து என்ன இப்ப நாங்க இந்த வீட்ல இருக்க கூடாது...

அவ்வளவு தானே? மீனா நம்ம துணிமணிகளை எல்லாம் எடுத்து வை என்று சொல்லியபடியே அப்பா வா நம்ம போகலாம் என்று அண்ணாமலையை கூப்பிட அதற்கு விஜயா நான் உங்கள தான போக சொன்னேன். நீ எதுக்கு இவரை கூப்பிடுற என்று திட்ட அதற்கு முத்து நான் என் அப்பாவை என்கூட தான் கூட்டிட்டு போவேன் என்று சொல்ல,

அதற்கு அண்ணாமலை ஆமா என்னுடைய மகன் எங்க இருக்கிறானோ அங்க தானே நானும் போக முடியும். என் மகன் பேச்சை தான் நான் கேட்பேன்... மீனா என்னுடைய துணிகளையும் சேர்த்து எடுத்து வைம்மா நாம கிளம்புவோம் என்று சொல்ல, அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாகி இருக்கிறார். இதனால் இனி முத்து மற்றும் மீனா வீட்டை விட்டு போகப் போகிறார்களா? அல்லது ஸ்ருதியும் ரவியும் மீண்டும் வீட்டிற்கு எப்படி வரப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications