Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.‌. மீனா செய்த உருப்படியான முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 31, 2026) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 31ஆம் தேதிக்கான எபிசோடில், லட்சம் கொடுக்க முயற்சி செய்ததற்காக விஜயா புது பிரச்சனை இருகுகிறார். அதே நேரத்தில் மனோஜ் சொன்ன விஷயத்தை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலின் (Siragadikka Aasai serial today episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், விஜயா, மகளிர் அமைப்பு தலைவியை சந்தித்து விஷயத்தை சமாளிக்க பணம் கொடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் அந்த தலைவி அதை ரகசியமாக வீடியோ எடுத்து விடுகிறார். உடனே "என்னை பணத்தால் வாங்க முடியாது... நீங்க லஞ்சம் கொடுக்க வந்தது வீடியோவாக இருக்கு... இது மட்டும் போதும், கோர்ட்டில் பார்த்துக்கலாம்" என்று மிரட்டி கிளம்புகிறார். இதனால் விஜயா பதறி, ஸ்ருதி மற்றும் ரவியிடம் என்ன செய்வது என்று கேட்கிறார். அவர்கள் "இதெல்லாம் முன்பே தெரிஞ்சிருந்தா நாங்களே தடுத்திருப்போம்" என்று சொல்கிறார்கள்.

திட்டிய அண்ணாமலை

பிறகு வீட்டில் ரவி நடந்ததை சொல்ல, அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். அதன்பின் முத்து, மீனா இருவரையும் அந்த மகளிர் அமைப்பு தலைவியிடம் சென்று பேச சொல்லுகிறார். அப்போது மீனா, "நாம போறத விட இந்த விஷயத்துல சம்பந்தப்பட்ட மனோஜ் நேர்ல போய் பேசினா தான் நம்புவாங்க" என்று சொல்லுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

மனோஜ் திமிர் பேச்சு

இதையடுத்து முத்து, மீனா இருவரும் மனோஜை பார்க்க ஷோரூமுக்கு செல்கிறார்கள். ஆனால் மனோஜ் "நான் யாரையும் பார்க்க வரமாட்டேன்" என்று திமிராக சொல்லி விடுகிறார். பின்னர் முத்து, மீனா இருவரும் மட்டும் அந்த தலைவியின் ஆபிஸுக்கு செல்கிறார்கள். அங்கு மற்றொருவரை அந்த தலைவி கடுமையாக திட்டுவதை பார்க்கிறார்கள். இதை பார்த்து "நாம போனாலும் இதே மாதிரி தான் ஆகும்" என்று நினைத்து பேசாமல் திரும்பி வருகிறார்கள்.

பயந்த மனோஜ்

வீட்டுக்கு வந்த பிறகு ரவி, முத்து இருவரும் மனோஜிடம் மீண்டும் பேசுகிறார்கள். ஆனால் அவர் இன்னும் வர மறுக்கிறார். அதற்குள் மனோஜுக்காக பார்த்த பெண் வீட்டுக்கு வந்து, அந்த மகளிர் அமைப்பு தலைவி பற்றி பேசுகிறார். அவர் பெண்களை கூட்டி போராட்டம் நடத்துவார், மேலும் ரோகிணியை அடித்ததற்காக மனோஜ், விஜயா இருவரையும் கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்.இதனால் மனோஜ் பயப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+