சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி மீனா கண்டுபிடித்த உண்மை.. வெளுத்து வாங்கிய விஜயா.. முத்து கேட்ட செம கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே ஒன்றாம் தேதிக்கான எபிசோடில், ஜெயிலிலிருந்து மனோஜ் வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆனால் தனக்கு உதவி செய்த ரோகிணி பற்றி மனோஜ் சொன்ன விஷயங்களை கேட்டு விஜயா கடும் கோபத்தில் இருக்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறக்கடிக்க ஆசை சீரியலின் (Siragadikka Aasai serial May 1 Episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், சிந்தாமணி பைனான்சியருக்கு போன் செய்து ரோகிணி ஐந்து லட்சம் பணம் கொண்டுட்டு வந்திருக்க, அவகிட்ட இன்னும் கூட பணம் பிறகு வாங்கிக்கலாம். ஆனா இப்போ ரோகிணிக்காக மனோஜ் மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குகிறேன் என்று போலீஸ் ஸ்டேஷன் என்று போய் சொல்லு என்று சொன்னதும் பைனான்ஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்.

மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். அப்போது ரோகிணி ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அதை பார்த்ததும் இருவருக்கும் சந்தேகம் வருகிறது. என்ன நடக்கிறது என்று இருவரும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் பைனான்சியர் வந்து ரோகிணிக்காக தான் மனோஜ் மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதாக சொல்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

சந்தோஷத்தில் ரோகிணி

அதோடு ரோகிணி பற்றி பெருமையாக பேச, இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மீனாவிற்கு சந்தேகம் வருகிறது. நாம ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி இந்த ரோகிணி தான் ஏதோ பிளான் பண்ணி மனோஜ் மேல பைனான்ஸியரை கம்ப்ளைன்ட் கொடுக்க வைத்திருக்கிறார் என்று சந்தேகப்படுகிறார். பிறகு மனோஜை வெளியே விடுகின்றனர்.

ஸ்டேஷனுக்கு வெளியே வந்த மனோஜ் ரோகிணிடம் நன்றி சொல்கிறார். அதற்கு ரோகிணி எனக்கு எப்போதுமே உன் மேல பாசம் இருக்கு, உனக்காக நான் எவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக்குவேன். ஆனா உன்னை மட்டும் யாருக்காக விட்டுக் கொடுக்க மாட்டேன், நீ கஷ்டப்பட்டால் என்னால தாங்க முடியாது என்று செண்டிமெண்டாக பேச அதை பார்த்து மனோஜும் ஃபீல் பண்ணுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

மீனா கேட்ட கேள்வி

அப்போதும் முத்துவும் மீனாவும் வந்து, நீ இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் கூட ரோகிணி தான் அதை முதலில் ஞாபகம் வச்சிக்கோ என்று மனோஜை வார்ன் பண்ணுகின்றனர். பிறகு மனோஜ் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். அதை பார்த்ததும் விஜயா மனோஜிக்கு ஆரத்தி எடுக்கிறார்.

இதை எல்லாம் பார்த்து அண்ணாமலை கடுப்பாகி கொண்டிருக்கிறார். பிறகு மனோஜ் இப்பதான் நான் யாரு நல்லவங்கன்னு புரிஞ்சுகிட்டேன். நீங்க இவ்வளவு பேரும் இருந்தும், என்னை வெளியே எடுக்க எந்த முயற்சியும் பண்ணல... ஆனா ரோகிணி தான் என்னை வெளியே கொண்டுட்டு வர வச்சிருக்கா.. அவ எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கா என்று ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

முத்து சொன்ன வார்த்தை

அப்போது முத்து கடுப்பாகி நாங்க உன்னை வெளியே கொண்டு வருவதற்காக எவ்வளவு முயற்சி எடுத்தோம் தெரியுமா? மீனா சிந்தாமணி வீட்டுக்கு போய் அவளை மிரட்டி விட்டு வந்திருக்கிறார். அதோடு சிந்தாமணி அதிகமாக வட்டிக்கு கொடுத்தாங்கனு அவ மேல கம்ப்ளைன்ட் கொடுக்க கூட லெட்டர் எழுதி வாங்கி இருக்கிறா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

கோபத்தில் விஜயா

ஆனாலும் மனோஜ் நீங்க என்ன பண்ணினாலும் என்ன வெளியே எடுக்க உங்களால முடியல. ரோகிணி தான் அஞ்சு லட்சம் கடன் வாங்கி அந்த பைனான்ஸியருக்கு கொடுத்து இருக்கா என்று பெருமையாக சொல்லிக்கொண்டே இருக்க, அதை பார்த்து கடுப்பான விஜயா மனோஜை போட்டு அடிக்கிறார். அதோடு நீ அவ போடுற நாடகத்தை நம்பி அவளை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு பார்த்தா அது கனவில் கூட நடக்காது என்று மிரட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+