சிறகடிக்க ஆசை: க்ரிஷ் உங்க அண்ணன் பையன் தான்.. மீனா கண்டுபிடித்த உண்மை.. சிக்கிய ரோகிணி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி மகன் கிரிஷ் பற்றிய உண்மைகளை மீனா கண்டுபிடிக்கிறார். க்ரிஷ் படிக்கும் ஸ்கூலில் பேரன்ஸ் மீட்டிங் நடக்கும் நிலையில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்திருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போது மாட்டுவார் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அதற்கு ஒவ்வொரு வாரமும் காத்திருக்கும் ரசிகர்களுக்கு சில எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு இயக்குனர் ஏமாற்றத்தை கொடுத்து விடுகிறார். அதுபோலத்தான் தான் இப்போது வெளியான ப்ரோமோவிலும் பரபரப்பான காட்சிகள் காட்டப்படுகிறது.

அதாவது ரோகிணியின் மகன் க்ரிஷ் படிக்கும் ஸ்கூலில் பேரன்ட்ஸ் மீட்டிங் நடைபெறுவதால் கண்டிப்பாக நீ கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள் என்று ரோகிணியின் அம்மா ரோகிணிக்கு போன் பண்ணி சொல்கிறார். அதற்கு சரி வரேன் என்று ரோகிணியும் சொல்லி இருக்கிறார்.
விஜய் டிவி சீரியல் கதாநாயகனுக்கு தலையில் நடந்த விபரீதம்..இப்படியா பண்ணுவாங்க? வெளியான வீடியோ
அதே ஸ்கூலில் வேலை பார்க்கும் அண்ணாமலை ஸ்கூலுக்கு அவசரமாக கிளம்புகிறார். அப்போது முத்து என்னாச்சுப்பா ஏன் சீக்கிரமா போற என்று கேட்க, அதற்கு அண்ணாமலை இன்னைக்கு ஸ்கூலில் பேரன்ஸ் மீட்டிங். அதனால என்னை வர சொல்லி இருக்காங்க என்று சொல்கிறார்.
அதற்கு முத்து இருப்பா நானும் அந்த பக்கமாக தான் போறேன் நானே உன்னை கொண்டு விடுறேன் என்று சொல்லி கூட்டிக்கொண்டு வருகிறார். பிறகு அண்ணாமலையை ஸ்கூலில் இறக்கி விடுகிறார். அந்த நேரத்தில் க்ரிஷ் அவருடைய பாட்டியோடு ஸ்கூலுக்கு வருகிறார். க்ரிஷை பார்த்ததும் மீனாவும் முத்துவும் க்ரிஷிடம் போய் பேசுகிறார்கள்.

அப்போது மீனா க்ரிஷிடம் எப்படி இருக்கடா என்று பேசியபடி அவருடைய பாட்டியிடம் என்னம்மா நீங்க ஒரு போன் கூட பண்ணல? எங்களையும் போன் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டீங்க என்று கேட்க, எப்படியாவது இவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டுமே என்று ரோகிணியின் அம்மா க்ரிஷ் உடைய மிஸ் என்கிட்ட பேசணும்னு சொன்னாங்க இப்ப வரேன் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
சிறகடிக்க ஆசை: உண்மையை புரிந்துகொள்ளும் அருண்.. மீனாவிடம் முத்து சொன்ன விஷயம்.. ஸ்ருதி செய்த செயல்
அந்த நேரத்தில் மீனா முத்துவிடம் எனக்கு ஒன்னு தோணுது க்ரிஷ் அப்பா உங்க அண்ணன் தான் என்று சொன்னதும் முத்து அதிர்ச்சி ஆகிறார். அப்போ அம்மா யாரு என்று கேட்க, அது அந்த ஜீவா என்று கடைசியில் காமெடி செய்கிறார். எப்படியோ ஓரளவுக்கு கண்டுபிடித்து இருக்கும் மீனாவும் முத்துவும் கடைசியில் ரோகிணியிடம் ஏதாவது ஒரு விதத்தில் அவமானப்பட போகிறார்கள் அல்லது திட்டு வாங்க போகிறார்கள் என்று தான் தெரிகிறது.

ரசிகர்கள் நினைத்தது ரோகிணி மாட்ட வேண்டும் என்று ஆனால் இப்போ மனோஜ்க்கு தான் புது சிக்கல் வரப்போகிறது என்று தெரிகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த ப்ரோமோவுக்கு கீழே ரசிகர்கள் மீனாவை திட்டி வருகிறார்கள்.

அப்படியே கதையை திருப்பி விட்டுட்டீங்களே மீனா, இதை பார்த்து முத்து வேற ஷாக் ஆகுறாரு.. அதை பார்த்தா எங்களுக்கு காமெடியா இருக்கிறது. சிரிக்க தான் தோணுகிறது. நடப்பது ஒன்னு நீங்க புரிஞ்சிக்கிறது ஒன்று கலாய்த்து வருகிறார்கள்.
இந்த ப்ரோமோ குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? ரோகிணி இந்த முறை மாட்ட போறாங்க என்று நினைக்கிறீர்களா? இல்ல மீனா கண்டுபிடித்த உண்மையை நினைத்து சிரிக்கிறீங்களா?
-
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications