சிறகடிக்க ஆசை: மனோஜ் மீது சந்தேகப்பட்டு ரோகிணி கேட்ட கேள்வி.. முத்து கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 18ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பணத்தை திருடி மாட்டிக்கொண்ட மனோஜிடம் ரோகினி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

அதற்கு விஜயா வந்து பதில் கொடுத்து முத்துவிடம் மாட்டிக் கொள்கிறார். இந்த நிலைக்கு இது என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அறையிலிருந்து மீனா வெட்கப்பட்டு கொண்டே வெளியே வர அதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார். ரோகிணிக்கு முன்னாடி இவப்பிள்ளை பெத்துருவா போலையே என்று புலம்பித் தவிக்க, அந்த நேரத்தில் ரோகிணி அறையில் இருந்து வெளியே வருகிறார். அப்போது ராத்திரி எல்லாம் கொஞ்சம் வேலை இருந்தது அதான் தூங்க முடியல என்று சொல்ல, என்னது நைட்டு வேலை பார்த்தியா? என்று விஜயா அதிர்ச்சியடைகிறார்.
ஆமா இவள் லைட் போட்டு இருந்ததால நானும் சரியா தூங்கல, எனக்கு காபி வேண்டும் என்று மனோஜ் கேட்க அதற்கு ஆமா நீ பார்த்த வேலைக்கு உனக்கு காபி தான் கொற போடா என்று கோபப்பட்டு விஜயா திட்டுகிறார். அதைத் தொடர்ந்து சீதா சைக்கிள் பஞ்சர் என்பதால் தள்ளிக்கொண்டு சென்று வீடுகளுக்கு பூ கொடுத்துவிட்டு வருகிறார். அப்போது எதிரே வந்த ரவி என்ன ஆச்சு ஏன் நடந்து வர என்று கேட்க சீதா நடந்ததை சொல்கிறார்.

அப்படியா சரி வா நான் கூட்டிட்டு போறேன் என்று ரவி சீதாவை பைக்கில் கூட்டிட்டு போகிறார். அதை பார்த்த பார்வதி இவன் பெரிய மன்மதனா இருப்பான் போலயே என்று விஜயாவிற்கு போன் செய்து ஏற்கனவே ஒரு பெண்ணை ரவி கூட்டிட்டு போனதும் இப்போது சீதாவை கூட்டிட்டு போவதையும் வைத்து சொல்லி சீதா தான் உன் வீட்டு மருமகளா வரப்போறா போல என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
அத்தோடு இப்படியே விட்டால் சரி வராது நீ அவனுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணி வை என்று சொல்ல அதற்கு விஜயா நீயே ஒரு பணக்கார பொண்ணா இருந்தா சொல்லு என்று சொல்கிறார். அடுத்து ரோகிணி ரூமில் ஏதோ யோசனையில் இருக்கிறார்.அப்போது மனோஜ் என்ன விஷயம் என்று கேட்க, ஒரு லட்ச ரூபாய் உங்க கைக்கு பணம் எப்படி வந்தது. அத்தை எப்படி அதை மறந்தாங்க? என்று கேள்வி மேல கேள்வி கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் மனோஜ் திணறிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த விஜயா இதை கேட்டு ஓடி வந்து நான் இதை எப்படி மறந்தேன்னு தெரியல என்று சொல்லி ரோகினியை சமாளிக்கிறார். அடுத்ததா ரூமில் இருந்து வெளியே வந்த முத்து திரும்பவும் இப்படி தப்பு நடந்துட்டு உனக்கு ஏன்டா வெட்கமே இல்லையா? ஏன் இந்த சபல புத்தி என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு எல்லாரையும் கூப்பிட்டு இனி இந்த வீட்டில் சண்டையே நடக்க கூடாது இந்த வீட்ல சண்டை நடந்ததனால் தான் எனக்கு விளைவு வேற மாதிரி இருக்கும் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இதை புரியாத அண்ணாமலை என்னதான்டா சொல்லுவர என்று கேள்வி கேட்க எனக்கு ஒரு பிரச்சனை ஆனா அது எனக்கு நாலா தெரியுது என்று சொல்ல, மீனா வெட்கப்படுகிறார். அடுத்து மனோஜிடம் உன்னால தான் எல்லா பிரச்சனையும் வந்துச்சு. உனக்கு இப்போ ஹனிமூன் அவசியமா? என்று கேட்டு மனோஜை திட்டி விட்டு அண்ணாமலை இடம் அப்பா நீ கல்யாணம் ஆகி ஹனிமூன் போய் இருக்கியா? என்று கேட்க அண்ணாமலை நான் எங்கடா அதெல்லாம் போயிருக்கேன் என்று சொல்கிறார்.
அடுத்து மீனாவிடம் நீயும் போணுமா உனக்கும் ஆசை இருக்கா என்று முத்து கேட்க, அப்படி எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்று மீனா சொன்னதும் உடனே அப்போ எல்லாருக்கும் அந்தமானுக்கு ஹனிமூன் டிக்கெட் போடுடா என்று மனோஜிடம் முத்து சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications