பொங்கல் அன்று சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படங்கள்.. இதை கவனிச்சீங்களா? குவியும் வாழ்த்து
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அப்போது முதல் முறையாக தன்னுடைய மூன்றாவது ஆண் மகனின் முகத்தையும் காட்டியிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எப்போதும் ஒருவருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சிவகார்த்திகேயனும் ஒரு முன் மாதிரியாக இருக்கிறார்.

கடந்த வருடத்தில் அவருக்கு பல நல்ல விஷயங்கள் நடந்தது. அமரன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பெரிய சூப்பர் ஹிட் கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கிய சிவகார்த்திகேயன் இப்போது ஆக்சன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு வித வித்தியாசத்தை காட்டிக்கொண்டு இருக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய பிரபலம் கிடைத்திருக்கிறது. ரஜினி- கமல்ஹாசனுக்கு பிறகு அஜித் விஜய் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து தனுஷ்- விக்ரம் வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனும் உயர்ந்திருக்கிறார்
இந்த நிலையில் பொங்கல் திருநாளில் குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில், "உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். பொங்கலோ பொங்கல்... அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவதாக பிறந்த மகனின் புகைப்படத்தை இதுவரைக்கும் வெளியே காட்டாமல் இருந்த நிலையில் இப்போது அவருடைய மகனின் முகத்தை தெரியும் படி குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். சிவகார்த்திகேயனின் மூத்த மகள் ஆராதனா சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்த கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியிருந்தார்.

இப்போது ஆராதனா சிவகார்த்திகேயன் தோளுக்கு மேல் வளர்ந்திருப்பதை பார்த்ததும் அடுத்த ஹீரோயின் சினிமாவில் ரெடி என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். அதோடு சிவகார்த்திகேயனுக்கு அதிகமான ரசிகர்கள் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications