Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகனின் கடனுக்காக பாட்டு பாடி வட்டி கட்டிய எஸ்.பி.பி.’ என்கிட்ட அப்படி சொன்னாரு! பாடகர் மனோ உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியத் திரையிசையின் முடிசூடா மன்னன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் (எஸ்.பி.பி.), தனது மகனுக்காகச் செய்த தியாகம் குறித்து, பாடகர் மனோ சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் மனம் திறந்து பேசியுள்ளார். மனோவின் இந்த உருக்கமான பேச்சு, எஸ்.பி.பி.யின் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SP Balasubrahmanyam SPB Charan Singer Mano

இசை சகாப்தம் எஸ்பிபி

எஸ்.பி. பாலசுப்ரமணியம், பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, கின்னஸ் உலக சாதனையைப் படைத்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் தனது குரல் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். பாடகராக மட்டுமன்றி, நடிகராகவும், தயாரிப்பாளராகவும், டப்பிங் கலைஞராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி. சரண், ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் திரையுலகில் வலம் வருகிறார்.

எஸ்.பி.பி.யின் தம்பி மனோ

எஸ்.பி.பி.யின் தம்பி என்று பலராலும் அழைக்கப்படும் பாடகர் மனோ, சுமார் 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவரது காந்தக்குரல், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. எஸ்.பி.பி.க்கும், மனோவுக்கும் இடையே ஒரு அண்ணன்-தம்பி பந்தம் இருந்தது. பலமுறை மனோவுக்கு எஸ்.பி.பி. வழிகாட்டியாகவும், உற்ற துணையாகவும் இருந்திருக்கிறார். எஸ்.பி.பி.யின் உடல்நிலை சரியில்லாதபோதும், அவரது இறுதி அஞ்சலியின்போதும் மனோ மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடந்து கொண்ட விதம், அவர்களின் ஆழமான நட்புக்கு ஒரு சான்றாக இருந்தது.

மனோவின் மகன் அறிமுகம்

பின்னணிப் பாடகர் மனோவின் மகன் துருவன் மனோ, வட்டக்கானல் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாடகர் மனோ, தனது அண்ணன் எஸ்.பி.பி. குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

"எனது அண்ணன் எஸ்.பி.பி. மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. என் தனிப்பட்ட வாழ்க்கையைக்கூட அவரிடம் பகிர்ந்திருக்கிறேன். ஒருமுறை என்னுடைய மகன்களின் சினிமா ஆர்வத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரு பையன் படம் பண்ண ஆசைப்படுறான்னும், இன்னொரு பையன் பாடகராக ஆசைப்படுறான்னும் சொன்னேன். அதுக்கு அவர், டேய்! நம்ம ஆசைப்படுறது எல்லாம் நமக்கு நடந்தா நாமதான் கடவுள். நம்மகிட்ட என்னென்ன இருக்கோ அதை வெச்சு பசங்க முன்னேற வழி பண்ணு என்று சொன்னார்" என்றார்.

மகன் கடனுக்கு வட்டி

மேலும் எஸ்.பி.பி. தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதையும் மனோ உருக்கத்துடன் குறிப்பிட்டார். "அதுக்கு எடுத்துக்காட்டா என்னையே எடுத்துக்கோ. என் மகன் படம் தயாரித்து நஷ்டம் ஆனதால, அந்தக் கடனுக்கு நான் பாட்டு பாடி வட்டி அடைத்தேன். அதனால அப்படி நீ போயிடாத. ஏன்னா, நம்ம ஒவ்வொரு படியா கஷ்டப்பட்டு 45 வருஷம் டிராவல் பண்ணி வந்திருக்கோம். ஒரு பாட்டை நீ பாடினாத்தான் காசு. உனக்கு சளி பிடிச்சு இருக்குன்னு உன் பையனைப் பாடச் சொன்னா ஒத்துக்க மாட்டாங்க. அதனால், ஒரு பாடகனுடைய காசு மதிப்பு மிக்கது" என்று எஸ்.பி.பி. தனக்கு அறிவுரை வழங்கியதாக மனோ கூறினார்.

தன் மகன் திரைப்படத் தயாரிப்பில் நஷ்டமடைந்த போது, அந்தக் கடனை அடைப்பதற்காக எஸ்.பி.பி. பல படங்களில் பாட்டு பாடியிருக்கிறார் என்பது, அவருடைய மகனுக்காக அவர் செய்த பெரும் தியாகத்தை உணர்த்துகிறது. மேலும், இளைய தலைமுறைக்குச் சரியான வழிகாட்டியாக அவர் இருந்திருக்கிறார் என்பதும் மனோவின் பேச்சில் இருந்து தெரிகிறது. எஸ்.பி.பி.யின் இந்தத் தியாகமும், மனிதநேயமும், அவர் இறந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவர் என்றும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்துகொண்டே இருப்பார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+