சூப்பர் சிங்கரில் ஜெயித்த வீடு, ஒரு வருஷம் ஆகியும் கைக்கு வரல.. வரி கட்ட முடியாம..! அருணா வேதனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற அருணாவிற்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்ட நிலையில் ஒரு வருடம் கடந்த பிறகும் அந்த வீட்டிற்கு தான் இன்னும் குடிப்பெயரவில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் அருணா பேசியிருக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் அவர் அதில் கூறி இருக்கிறார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் புதிது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் தொடங்குவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கும் பாடல் நிகழ்ச்சிகளுக்கும் அமோக வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பலர் இப்போது சினிமாவில் பின்னணி பாடகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள். அதில் ஒன்பதாவது சீசனில் டைட்டில் வெற்றி பெற்ற அருணாவும் ஒருவர்.
சூப்பர் சிங்கரில் ஒன்பதாவது நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அருணா செலக்ட் ஆனார். அவரை தொடர்ந்து பிரியா ஜெர்சன் இரண்டாவது இடத்தை பிடித்தார். அதுவரைக்கும் 8 சீசன்களாக ஆண்கள் மட்டுமே சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக இருந்த நிலையில் ஒன்பதாவது சீசனில் தான் ஒரு பெண் போட்டியாளராக அருணா வெற்றி பெற்று இருந்தார்.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அருணா பேசும் போது நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தந்த வீட்டிற்கு இன்னும் போகவில்லை. பொதுவாக பெரிய மனசு பண்ணி ஒரு கிப்ட் ஒருத்தங்க தராங்கன்னா அதற்கும் சில வரிகள் கட்ட வேண்டியது இருக்கு.
எனக்கு சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றதற்காக 50 லட்சத்திற்கு மேலே மதிப்புள்ள ஒரு வீடு தந்தாங்க. அதற்கு நாங்களும் லட்சக்கணக்கில் வரி கட்ட வேண்டியது இருந்தது. ஆனால் எங்கள் குடும்பத்தின் சூழ்நிலையால் என்னால் அந்த பணத்தை முழுமையாக கட்ட முடியாது.
அதனால் இப்ப வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். விரைவில் மொத்த பணத்தையும் கட்டி முடித்ததும் அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்து விடுவோம். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுகிறோம் என்று பர்மிஷன் வாங்கி இருக்கிறோம் என்று அருணா கூறி இருக்கிறார்.
ஆனால் 60 லட்சம் வீட்டிற்கு சுமார் 15 லட்சத்திற்கு மேலாக டேக்ஸ் கட்ட வேண்டியது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளில் வீடு பரிசு கொடுக்கும் நபர்கள் எளிதாக போட்டியாளர்களுக்கு சென்றடையும் வகையில் கொடுத்தால் இது போன்ற சிக்கல்கள் அவர்களுக்கும் வராது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
சமீபத்தில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷுக்கும் ஐந்து கோடி பரிசு கொடுக்கப்பட்ட நிலையில் அதிலும் குறிப்பிட்ட பணம் பிடித்துக் கொண்டு தான் குகேஷுக்கு கொடுக்கப்படும். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அருணா பாடல் நிகழ்ச்சிக்கு பாட போயிருந்த இடத்தில் அவரிடம் நீங்கள் என்ன ஜாதி என்று சிலர் கேட்டது குறித்து வேதனையோடு அருணா பேசியதும் சில மாதங்களுக்கு முன்பு வைரல் ஆகி வந்தது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அருணா பல சினிமா பாடல்கள் பாடியிருந்தாலும் அவர் கோவில்களில் பக்தி பாடல்கள் பாடுவது தான் தனக்கு ரொம்பவும் பிடித்தது என்று பாடிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications