சின்ன மருமகள் சீரியல் நடிகையால் வந்த வினை.. புருஷனோட என் வீட்டில் 10 நாள்! பிக் பாஸ் தாமரை செல்வி ஆதங்கம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை தாமரை செல்வி தற்போது வெளியிட்டுள்ள வீடியோக்களும், பேட்டியும் சோசியல் மீடியாவில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கண்ணீருடன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், தன்னை நம்ப வைத்து நகை மோசடி செய்ததாக ஒருவர் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார். அந்த விவகாரம் இன்னும் அடங்காத நிலையில், தற்போது ஒரு தனியார் யூடியூப் சேனலில் அவர் அளித்த பேட்டி இந்த சர்ச்சையை மேலும் பெரிதாக்கியுள்ளது.

சீரியல் உறவு
அந்த பேட்டியில் தாமரை செல்வி கூறியதாவது, சின்ன மருமகள் சீரியல் ஷூட்டிங்கில் தான் நடிகை ஸ்வேதாவுடன் நெருக்கமாக பழகியதாக தெரிவித்துள்ளார். "அந்த சீரியலில் அவள் என்னை 'அம்மா' என்று கூப்பிடுவாள். நாங்களும் ஷூட்டிங் ஸ்பாட்டில் உண்மையிலேயே அம்மா-மகள் போல இருந்தோம். அந்த அளவுக்கு நெருக்கம் இருந்தது" என்று அவர் கூறியுள்ளார்.
வீட்டிலேயே தங்க வைத்தேன்
அந்த நடிகை திடீரென திருமணம் கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்தில் குடும்ப பிரச்சனையால் கணவருடன், தங்க இடமின்றி இருந்ததாக தாமரை செல்வி கூறுகிறார். 'எங்க போறதுன்னே தெரியல'ன்னு சொன்னா. அதனால் என் வீட்டிலேயே 10 நாள் தங்க வைத்தேன்" என்று அவர் தெரிவித்தார்.
பணம் வாங்கி சிக்கல்
இந்த நேரத்தில்தான் புதிய பிரச்சனை உருவானதாக அவர் கூறுகிறார். "தாமரை செல்வி வீட்டில் ஸ்வேதாவும் அவருடைய கணவரும் தங்கி இருந்த சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுவேதா பிரிந்து போய்விட்டதாகவும், அதற்குப் பிறகு அவருடைய கணவர் எனக்கு இப்போதைக்கு போக இடம் இல்ல அதனால இன்னும் சில நாட்கள் மட்டும் உங்க வீட்டுல இருந்துக்கிறேன் என்று கண்ணீருடன் கேட்டார் அதனால் நானும் சரி என்று சொல்லிவிட்டேன் என தாமரை செல்வி சொல்லி இருக்கிறார்.
பிறகு 'என் மனைவிக்கு ப்ரமோஷன் பண்ணுறேன்'ன்னு சொல்லி சில பேரிடமிருந்து பணம் வாங்கியிருக்கா. ஆனா அது நடக்கல. அதனால் பணம் கொடுத்தவர்கள் எல்லாம் வந்து மிரட்டுறாங்க அதனால கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என்று கேட்டான் அதற்காக நானும் பணம் எல்லாம் கொடுத்தேன்.
ஏமாற்று வேலை
"சில இடங்களில் இருந்து எனக்கு ஸ்கேனர் அனுப்பி 'பணம் போட்டு விடுங்க'ன்னு கேட்டான். பாவம்னு நினைச்சு நானும் பலமுறை பணம் அனுப்பினேன்" என்று கூறியுள்ளார். ஆனால் இந்த உதவிகள் அனைத்தும் இறுதியில் தன்னையே பாதித்துவிட்டதாக தாமரை செல்வி கூறுகிறார்.
"கடைசில என்னைதான் ஏமாத்திட்டான். அந்த பையன் எனக்கு ஆப்பு வச்சுட்டான். இப்போ அந்த நடிகையும் என்கிட்ட பேச மாட்டா" என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையம் வரை சென்ற பிரச்சனை
இதற்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், தன்னுடைய நகையை ஏமாற்றி விற்றதாக 'ஆதி' என்ற நபர் மீது குற்றச்சாட்டு வைத்து, தனது கணவர் பார்த்தசாரதி மூலம் போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் தாமரை செல்வி கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications