கலைஞர் டிவியின் “வா தமிழா வா” நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம்? மனம் திறந்த கரு. பழனியப்பன்
சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வா தமிழா வா" என்ற நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென்று அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். இது குறித்து சமீபத்தில் அது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் இலக்கியம், சினிமா அரசியல் என எல்லா துறையிலும் சிறந்து விளங்கும் கரு பழனியப்பன் விவாத மேடையையும் விட்டு வைக்காமல் கலக்கி வருகிறார். அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் ஜீ தமிழில் ஒளிபரப்பான "தமிழா தமிழா" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் சாயலாக இருந்தாலும் அதிலும் தன்னுடைய தனித்துவத்தால் கரு.பழனியப்பன் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தார். ஒரு சில வருடங்களாகவே அவர் அந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார்.
அது குறித்து அந்த நேரத்தில் கரு பழனியப்பன் பேசுகையில், "எந்த இடத்தில் நம்மால் சுயமாக முடிவெடுக்க முடியாமல் போகிறதோ... நம்முடைய முடிவுகள் எங்கே தடுக்கப்படுகிறதோ அதில் நாம் இருந்து அர்த்தமில்லை என்பதால் அதிலிருந்து விலகி விட்டேன்" என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து கலைஞர் டிவியில் "வா தமிழா வா" என்ற நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிகழ்ச்சியும் பிரபலம் அடைய தொடங்கியது ஆனால் திடீரென்று தற்போது வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் எதனால் கரு. பழனியப்பன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில், "நான் விலகியதற்கு நீங்கள் நினைக்கிற மாதிரி எந்த சர்ச்சையான காரணமும் கிடையாது. பணிச்சுமை காரணமாக மட்டும்தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் மற்றபடி எந்த காரணமும் இல்லை" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. காரணம் கரு பழனியப்பன் அதிகமாக எந்த திரைப்படத்திலும் இப்போது நடித்தது போல தெரியவில்லை. ஆனால் எதற்காக தனக்கு அதிகமான வேலை இருக்கிறது என்று சொன்னார் என்று ரசிகர்கள் கேள்விகளுக்கு வருகிறார்கள்.
அதே நேரத்தில் புதியதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் ஆரி எப்படி தொகுத்து வழங்கப் போகிறார்? என்பதை பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் ஆர்வத்தோடு இருப்பதாக கூறி வருகிறார்கள். நடிகர் ஆரிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைத்திருந்தது. இந்த நிலையில் இவர் தொகுப்பாளராக வந்திருக்கும் நிலையில் தனக்கு கிடைத்த பெயரை தக்கவைத்துக் கொள்வாரா? இல்லையா? என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications