Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரத்குமாருக்கு சளைக்காத மகள்கள்.. சகோதரியோடு சேர்ந்து வரலட்சுமி தொடங்கிய நிறுவனம்! ஆரம்பமே அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி சரத்குமார், இப்போது தன் வாழ்க்கையில் ஒரு புதிய, மிக முக்கியமான பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடந்த நிலையில், இப்போது தனது சகோதரியுடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, தானே இயக்குநராகவும் அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி, திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

Varalaxmi Sarathkumar

யார் இந்த வரலட்சுமி சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. இவருடைய தாயார் சாயா தேவி. அவரும் ஒரு சில திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வணங்கான் திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல சரத்குமாரின் இரண்டாவது மனைவிதான் பிரபல நடிகை ராதிகா சரத்குமார். திரைக் குடும்பப் பின்னணியில் இருந்தாலும், வரலட்சுமி தன் தனித்துவமான நடிப்புத் திறமையால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தவர்.

இவர் போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானாலும், வழக்கமான கதாநாயகி வேடங்களைச் செய்யாமல், துணிச்சலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தவர். தாரை தப்பட்டை, சர்கார், கிராக்கு (தெலுங்கு) போன்ற படங்களில் இவருடைய நடிப்பு, லேடி வில்லியாகவும், வலுவான துணை நடிகையாகவும் இவருக்கு ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுத் தந்தது. நடிப்பில் இவர் தேர்ந்தெடுத்த வித்தியாசமான பாதை, இவரைப் பற்றிப் பல சர்ச்சைகள் எழ வழிவகுத்தாலும், தன் கருத்தை தைரியமாகப் பேசும் குணம் இவருக்குப் பல ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. சம ஊதியம், பெண்களின் பாதுகாப்பு குறித்து இவர் அடிக்கடி குரல் கொடுப்பவர்.

Varalaxmi Sarathkumar

தொடங்கிய புதிய பயணம்

வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில்தான் ஆர்ட் கேலரி உரிமையாளர் நிகோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரு பக்கம் இருக்க, தொழில் வாழ்க்கையில் அடுத்த உச்சத்தைத் தொட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

அதற்கு அடையாளமாகத்தான், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தோசா டைரீஸ் - சேப்டர் 1 என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். தனது சகோதரியுடன் சேர்ந்து தயாரிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்திருப்பது, அவருக்கு ஒரு மறக்க முடியாத தொடக்கமாக அமைந்துள்ளது.

இயக்குநராகும் வரலட்சுமி

இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்திலேயே, வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். படத்துக்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு: "சரஸ்வதி". சரஸ்வதி என்றாலே கலைகளின் அதிபதி. வரலட்சுமி தேர்ந்தெடுத்திருக்கும் இந்தத் தலைப்பு, அவருடைய கலை மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது. இந்தப் படத்தில், அவரே முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். அவருடன், நடிப்பில் ஜாம்பவான்களான பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா போன்ற பிரபல நட்சத்திரங்கள் இணைவது, படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

தொழில்நுட்ப ரீதியிலும் இந்தப் படம் மிகவும் வலுவாக இருக்கிறது. முன்னணி இசையமைப்பாளர் தமன் S இசையமைக்கிறார். இவருடைய இசை எப்போதும் இளைஞர்களைக் கவர்வது. A.M. எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராஜன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

நடிப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த வரலட்சுமி, இப்போது இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முக அவதாரம் எடுத்திருப்பது, அவருடைய துணிச்சலான ஆளுமையைக் காட்டுகிறது. சகோதரிகள் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கும் இவர்களுக்கு, திரையுலகம் சார்பாக வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 'சரஸ்வதி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, வரலட்சுமியின் அடுத்த கட்டப் பயணத்திற்கு ஒரு தொடக்கமாக அமையும் என்று நம்புவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+