ஐக்கிக்கு அதிர்ச்சி கொடுத்த வருண்... இது என்ன புது ட்விஸ்ட்... குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு வருண் செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஒரு சில நாட்களுக்குள் இவ்வளவு வேகமா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
திடீரென்று வருணை பார்த்த மகிழ்ச்சியில் ஐக்கி பெர்ரி துள்ளி குதித்துள்ளார்.

நண்பர்களோடு என்ஜாய்
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் வருண் தன்னுடைய நண்பர்களை சந்திக்க துவங்கிவிட்டார். அவருடைய பிக்பாஸ் தோழியான அக்ஷராவுடன் காபி ஷாப் சென்று பல போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பிவிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்த நண்பர்களையும் சந்திக்க கிளம்பியிருக்கிறார். ஒரே நாளில் இவர் சுற்றி சுற்றி வலம் வருவதைப் பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

வழக்கமாக நடைபெறுவது தான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது போட்டியாளர்கள் அடித்துக் கொண்டு இருப்பதும், வெளியே வந்ததும் பாச மழை பொழிவதும் ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டுதான் வருகிறது. என்ன தான் இவர்கள் உள்ளே அடித்துக்கொண்டிருந்தாலும், டாஸ்க்குகாக தான் நாங்கள் அப்படி செய்து கொண்டிருந்தோம் என்று ஒரே வார்த்தையில் கூறி விடுகிறார்கள். ஆனால் நாங்கள் எல்லாமே ஒன்றுதான் என்று இவர்கள் ஒவ்வொரு சீசனிலும் நிரூபித்து வருகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது கூட வருண் அவருடைய நண்பர்களுடன் வலம் வரும் போட்டோக்கள் ரசிகர்களுக்கு இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

செம என்ஜாய் போல. ..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் முதல் முறையாக இரண்டு எலிமினேஷன் நடந்து இரண்டு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் வெளியாகி இருக்கின்றனர். அதுவும் ஒன்றாக சுற்றி திரிந்த நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அக்ஷரா மற்றும் வருண் வெளியேற்றம் ரசிகர்களை வருத்தமடையச் செய்திருந்தாலும் போட்டியாளர்களுக்கு எஞ்சாய் ஆகத்தான் இருக்கிறது என்று ஹோட்டல் சென்று என்ஜாய் செய்து வருகிறார்கள். நேற்று அக்ஷரா வருண் மதுமிதா சேர்ந்து தங்கள் நட்பை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த வருண்
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஐக்கி பெர்ரி அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களையும் சந்தித்து கொண்டிருக்கும் நேரத்தில் நேற்று இவர்கள் அணியில் ஐக்கி பெர்ரி காணவில்லையே என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வந்தனர். அது வருணுக்கு தெரிந்து விட்டது போல, அதனால் ஐக்கியின் வீட்டிற்கு சென்று வருண் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவருடைய வீட்டிற்கு செல்லும்போது அக்ஷரா தான் போன் செய்துள்ளார். அதனால் அக்ஷரா தான் வருகிறார் என்று எதிர்பார்த்தாராம். ஆனால் அக்ஷரா வராமல் வருண் மட்டும் சென்று உள்ளார். இது ஐக்கி பெர்ரிக்கு ஒரு பக்கத்தில் வருத்தமாக இருந்தாலும், ஒரு பக்கத்தில் இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications