Sundari Neeyum sundaran Naanum Serial: அப்பப்போ இடுப்பு பிரச்னையை கரண்ட்ல கொண்டு வந்துடறாய்ங்க!
Recommended Video
சென்னை: நீ என் இடுப்பை பார்த்தே.. நீ என் இடுப்பை பார்த்தேன்னு குஷி படத்துல சீன் வச்சாலும் வச்சாய்ங்க.
சீரியல்களில் கூட அப்பப்போ இடுப்பு பிரச்னையை கரண்ட்ல கொண்டு வந்துடறாங்க.
விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஒரு இடுப்பு பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு.

பெறுக்கறது துடைக்கறது
தமிழும் வேலுவும் கல்யாணம் ஆகியும் பிரிஞ்சுதான் வாழறாங்க. முதலில் வேலு தமிழ் மீது கோவமா இருந்தான். இப்போது மாறிட்டான். ஆனால், தமிழுக்கு இன்னும் மனசு மாறலை போலிருக்கு அதனால் இன்னும் வேலுவிடம் ஓட்ட ஆரம்பிக்கலை. வழக்கம் போல வீட்டை பெறுக்கறது.. துடைக்கறதுன்னு வேலையில் ஈடுபட்டு இருக்கா.

மனுஷன் அலைபாயறான்.
தமிழின் இடுப்பில் பாட்டி கொடுத்த சாவிக் கொத்து அழகா தொங்கிகிட்டு இருக்கு. வேலு அந்த நேரம் பார்த்து சோஃபாவில் உட்கார்ந்து இருக்க அவன் கண்ணில் தமிழின் அழகான இடுப்பு பட்டுவிடுகிறதாம்.மனுஷன் அலைபாயறான்.

இந்த வேலைதான்
இவனுக்கு தமிழ் வேலை செய்வது உறுத்தலா இருக்க, எதுக்கு தமிழ் இந்த வேலை எல்லாம் செய்யறேன்னு பாதி விழுங்கியும் விழுங்காதவனாக பேசுகிறான். எப்போதும் இந்த வேலையை நான்தான் செய்யறேன்னு தமிழ் சொல்ல, அதுக்காக பெறுக்கறது துடைக்கறது எல்லாமா செய்வாங்கன்னு கேட்கறேன்.

இடுப்புதான் பிரச்சனை
ஏன் நான் வேலை செய்யறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறாள் தமிழ். எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை.. இடுப்புன்னு பட்டுன்னு சொல்லிடறான். என்ன என்று அவள் கேட்க, இல்லை இடுப்பு வலிக்குமேதான்னு சமாளிக்கிறான்.

சாவிக் கொத்து
இத்தனை நாள் இந்த சாவி இந்த வீட்டில்தான் இருந்துச்சு.. அப்போ எதுவும் டிஸ்டர்ப் பண்ணலியே.. இன்னிக்கு ரொம்ப தொந்தரவு பண்ணுதே.. இதை சுத்தமா மறக்க சுத்தி சுத்தி போயிட வேண்டியதுதான்னு சோஃபாவில் இருந்து உருண்டு சுத்தி சுத்தியே நகர்ந்து போறான்.
தொலைக்காட்சி சீரியல்களில் இடுப்பை வச்சு அப்பப்போ கரண்ட் ஷாக் கொடுத்துகிட்டே இருக்கறாய்ங்க!












Click it and Unblock the Notifications