இந்த மாதமே முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.. திடீர் முடிவுக்கு காரணம் இதுதானா? லீக்கான தகவல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அந்த சீரியல் இப்போதுதான் அதிரடியான திருப்பங்களும், சுவாரசியமாகவும் வந்திருக்கிறது. ஆனால் இந்த சீரியலை இந்த நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரசிகர்கள் அதிர்ப்த்தி தெரிவித்து வருகிறார்கள். அது எந்த சீரியல் என்று விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சின்னத்திரையில் புதியது புதியதாக சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் ஒரு சில சேனல்களில் மட்டும் தான் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும். பிறகு அதற்கு போட்டியாக மற்ற சேனல்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பானது. சில வருடங்களுக்கு முன்பு மற்ற மொழிகளில் ஹிட்டான சீரியல்களை டப்பிங் செய்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு சின்னத்திரை திரும்பி இருக்கிறது.

இந்த மாதத்தோடு முடிவு
அதுபோல ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் இளைஞர்கள் கொண்டாடும் வகையில் சில சீரியல்கள் இடம் பிடித்திருக்கிறது. அதில் பனிவிழும் மலர்வனம் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த வருடத்தில் ஜூன் மாதத்தில் தான் தொடங்கப்பட்டது. இந்த சீரியல் தொடங்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதிகமான எதிர்பார்ப்பு
காரணம் இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை வினுஷா தேவி கதாநாயகியாக நடிக்க இருந்தார். அதுபோல அவருக்கு ஜோடியாக நடிகர் சித்தார்த்தும் நடிப்பதாக இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதுபோல மௌனராகம் சீரியல் மூலம் பிரபலமடைந்த ஷில்பாவும் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் ரயான் நடித்திருந்தார்.
ரயான் அதற்கு முன்பு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் பனிவிழும் மலர்வனம் சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார் என்றதும் இந்த சீரியலுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்குப் பிறகு இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு அவர் சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார், அதனால் புதிய நடிகர் நடித்து வருகிறார்.

ஆர்வத்தை ஏற்படுத்திய ப்ரோமோ
அதுபோல ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு ப்ரோமோ வெளியாகி ஒரு சில மாதங்களுக்கு பிறகு தான் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு நல்ல டிஆர்பி கிடைத்தது. ஆனாலும் தற்போது ட்ரெண்டில் இருக்கும் குழப்பமான திருமணமே இந்த சீரியலிலும் நடைபெற்றது. வினிஷா தேவி ஏற்கனவே ஒருவரை காதலித்து அவரோடு திருமணம் நடக்கும் தருணத்தில், கதாநாயகனின் தங்கையை வினுஷாவின் தம்பி திருமணம் செய்து விட்டார் என்ற கோபத்தில் கதாநாயகன் சித்தார்த்த் வினுஷா தேவிக்கு மணமேடையில் வந்து தாலி கட்டி விடுவார்.
அதற்குப் பிறகு வினுஷா தேவி சித்தார்த் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவருடைய குடும்பத்திற்கு வந்திருப்பார். பிறகு சித்தார்தை புரிந்து கொண்டு அவரை காதலிக்க தொடங்கி இருக்கிறார். இதுதான் இப்போது இந்த சீரியலில் கதையாக இருக்கிறது. ஆனால் இந்த சீரியல்தான் இந்த மாதத்தோடு முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
லீக்கான தகவல்
இந்த சீரியலில் ஆரம்பத்தில் பிடிக்காத திருமணம் என்ற காரணத்தை சொல்லி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும் இப்போது கதாநாயகி மற்றும் கதாநாயகன் இருவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி மற்றும் அன்பு ரசிகர்கள் மத்தியிலும் கவர தொடங்கி இருக்கிறது. இதனால் இந்த சீரியல் திடீர் முடிவு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறி வருகிறார்கள்.

முடிவுக்கு காரணம்
ஆனாலும் இந்த சீரியலின் டிஆர்பி எதிர்பார்த்து அளவிற்கு இல்லை என்பதால் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் சமீபத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஒரு வீடியோ எடுத்திருந்தனர். அந்த வீடியோவில் மார்ச் மாதத்தோடு இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்பது போல அவர்கள் பேசி இருக்கிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல் முடிவு இன்னும் எத்தனை நாளில்! வெளிப்படையாக பேசிய ரேஷ்மா
ஆனாலும் அதிகாரப்பூர்வமான தகவலை இன்னும் சேனல் தரப்பிலிருந்து வெளியிடவில்லை. இதனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சீரியல் தொடர போகிறதா? அல்லது முடிவுக்கு வரப் போகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications