siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரை நள்ளிரவில் அரெஸ்ட் செய்த போலீஸ்.. பின்னணி காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீ தேவா என்பவரை போலீஸ் கைது செய்திருக்கிறது. அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் டிஆர்பியில் நல்ல வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சமீப காலமாக இந்த சீரியலில் ஒரு சில காட்சிகளையே வந்து கொண்டிருக்கிறது என்பது ரசிகர்களுக்கு வருத்தம் தான். ஆனாலும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

ஒரு பக்கம் ரோகிணி மாட்ட வேண்டும் அவரை பற்றிய உண்மைகள் வீட்டிற்கு தெரிய வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் கொடுப்பது போல இந்த உண்மை மீனாவிற்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.. மீனாதான் தியாகி ஆச்சே வழக்கம் போல இந்த உண்மையை வீட்டில் சொல்லாமல் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இந்த சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீதேவா நேற்று இரவு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில், இரவு நேரத்தில் ஒரு போலீஸ் ஜீப்பில் போலீஸ் அதிகாரிகள் ரொம்ப நேரமா தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்ன நடந்தது என்று நாம போய் பார்க்கலாம் என்று தன் கூட இருந்தவர்களை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு அங்கிருந்த போலீஸிடம் சென்று என்ன சார் ரொம்ப நேரமா இங்கேயே நிற்கிறீங்க என்று ஸ்ரீதேவா கேட்கிறார்.
அதற்கு உள்ளே இருந்த போலீஸ்காரர்கள் கோபப்பட்டு நீ யாரு? இங்கே எதற்காக வந்து பேசுற என்று கேட்கிறார்கள். அதற்கு ஸ்ரீதேவா நீங்க தான சார் ரொம்ப நேரமா அங்க இருக்கிறீங்க, அதனாலதான் கேட்கிறேன். எனக்கு பக்கத்து வீடுதான் என்று சொன்னதும் அங்கிருந்த போலீஸ்காரர்கள் கோபமாகி ஸ்ரீதேவாவை வண்டிக்குள் இழுத்து போட்டு அரெஸ்ட் செய்து கூட்டிக்கொண்டு போவது போல இருக்கிறது. ஆனால் இது நிஜமாக நடந்த சம்பவமா? அல்லது இதுவும் சூட்டிங் வீடியோவா என்று ஸ்ரீதேவா அதில் குறிப்பிடவில்லை.
இது குறித்து ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவில் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். என்னாச்சு இது ரீலா? அல்லது ரியலா? என்று கேட்டு வருகிறார்கள். ஆனால் அது ரியல் இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. உள்ளிருக்கும் சில போலீஸ் உடை அணிந்தவர்கள் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்ரீ தேவாவும் இப்படி தெருவில் இருக்கும் போலீஸ்காரர்களிடம் சென்று விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இவர் வழக்கம் போல பிராங்க் பண்ணுகிறார் பிரண்ட்ஸ் என்று கமெண்ட்கள் குவிகிறது.
சிறகடிக்க ஆசை: நான் தான் கல்யாணி, உண்மையை சொன்ன ரோகிணி.. கோபத்தில் முத்து! ஆடிப்போன விஜயா
சீரியலில் தான் இவர் கோக்குமாக்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் என்றால் நிஜத்திலும் இப்படியே இருக்கிறாரே.. இந்த மனுஷனுக்கு எப்போ தான் புத்தி வருமோ என்று சிலர் அலுத்துக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. அதோடு ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியும் போது என்ன முடிவெடுப்பீங்க மனோஜ் என்றும் சிலர் ஆர்வத்தோடு சீரியல் பற்றியும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications