மணிமேகலை கையில் இருக்கும் கலகல "கண்ணாடி வளையல்".. இதற்கு பின்பு இத்தனை ரகசியங்களா?
சென்னை: வி.ஜே மணிமேகலை சமீபத்தில் தன்னுடைய கைகளில் தொடர்ந்து ஒரே கலரில் கண்ணாடி வளையல் அணிந்து கொண்டிருக்கிறார்.
எத்தனையோ வளையல் வகைகள் இருந்தாலும் கண்ணாடி வளையல் அணிவதால் பல நன்மைகள் இருக்கிறது, உங்களுக்கு தெரியுமா?
அது தெரிந்ததனால் தான் தற்போது மணிமேகலை தன்னுடைய கைகளில் ஊதா கலரில் கண்ணாடி வளையல் அணிந்திருக்கிறாரோ என்னவோ!

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் பல சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடித்து இருக்கிறார்கள். அது ஒரு வகையில் அறிவியல் சார்ந்ததாகவும் இருந்திருக்கிறது. அந்த மாதிரி தான் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய கைகளில் கண்ணாடி வளையல் அணிய வேண்டும் என்று அப்போது கூறி இருக்கின்றனர்
பெண்களின் கைகளில் இருக்கும் கண்ணாடி வளையல்களால் வீட்டிற்குள் நேர்மறையான ஆற்றல் கிடைக்கிறது. அதுபோல அந்த கண்ணாடி வளையலின் ஓசை எனது பெண்களின் காதில் கேட்டுக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு மன அமைதியும் ஏற்படும். இதனால் வீட்டில் சண்டை சச்சரவு ஏற்படாத நிம்மதியான சூழ்நிலை அமையும் என்றும் கூறப்படுகிறது.
அதோடு நம் உடலில் இருக்கும் நல்ல ஆற்றல் நமது கைகளின் வழியாக வெளியேறும் சமயத்தில் அந்த ஆற்றலை வெளியேற விடாமல் பெண்கள் கையில் அணிந்திருக்கும் வளையல்களால் மூட்டு பகுதியிலேயே தடுத்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது. அந்த காலங்களில் வீடுகள் அமைதியாக இருக்கும் நேரத்தில் பெண்களின் கைகளில் இருக்கும் கண்ணாடி வளையல்களில் இருந்து வரும் ஒலிகளால் வீட்டில் நேர்மறை ஆற்றல் கொடுத்திருக்கிறது.
இந்த காலத்தில் யாரும் அப்படி கண்ணாடி வளையல் அணியாமல் இருப்பதால் தான் பலர் கடைகளில் விற்கும் சத்தம் வரும் பொருள்களை வாங்கி வீட்டில் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறோம். காற்றில் அசைந்து அந்த பொருள்கள் ஆடும் போது வரும் சத்தத்தை விடவும் பெண்கள் கையில் அணியும் கண்ணாடி வளையலில் வரும் சத்தம் ரொம்பவே சூப்பரா இருக்கும். அதை புரிந்து கொண்டதாலோ என்னவோ தற்போது விஜே மணிமேகலை தன்னுடைய கைகளில் கண்ணாடி வளையல்களை தவழ விட்டிருக்கிறார்.

குக் வித் கோமாளிக்கு பிறகு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த மணிமேகலை இப்போது தமிழ் புத்தாண்டில் விஜய் டிவியில் நடந்த பட்டிமன்றத்தில் கலந்து கொண்டிருக்கிறார். புடவையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த மணிமேகலை அதில் ஊதா கலரில் கண்ணாடி வளையல்களை அணிந்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் அதற்கு பிறகு தன்னுடைய கணவரோடு கிராமத்தில் போட்டோ சூட்டும் எடுத்து இருக்கிறார். சுடிதாரில் கணவரோடு எடுத்த புகைப்படங்களிலும் அதே கலர் கண்ணாடி வளையலை அணிந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தற்போதைய சூழ்நிலையில் பல பேர் மறந்த கண்ணாடி வளையலை மணிமேகலை போட்டு இருப்பதை பாராட்டி வருகின்றனர்.
ஏற்கனவே ஊதா கலரில் எதை பயன்படுத்தினாலும் மன அமைதியும், ஆரோக்கியமும் கூடும் அதனால்தான் மணிமேகலையும் அணிந்திருக்கிறார். இதை பார்த்தாவது பல பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணியலாம் என்று கருத்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications