கல்யாணத்துக்கு பிறகு நடந்த சம்பவம்! எவ்வளவு பொறுமையா இருக்கிறது? கனா காணும் காலங்கள் சங்கீதா ஆதங்கம்
சென்னை: சின்னத்திரை உலகில், எப்போதுமே நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ரசிகர்கள் விவாதிப்பது வாடிக்கைதான். ஆனால், சமீபத்தில், தன்னைவிட வயதில் சிறியவரைத் திருமணம் செய்துகொண்டதற்காக, நடிகை வி.ஜே. சங்கீதா நெட்டிசன்களால் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். இந்த விமர்சனங்களுக்கு அவர் தற்போது அளித்திருக்கும் உணர்வுப்பூர்வமான மற்றும் துணிச்சலான பதில், பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

யார் இந்த வி.ஜே. சங்கீதா
வி.ஜே. சங்கீதா, ஆரம்பத்தில் ஐ.டி. துறையில் வேலை பார்த்து வந்தவர். நடிப்பின் மீதும், ஊடகங்களின் மீதும் இருந்த தீராத ஆர்வத்தால், பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அவருக்கு ஒரு வி.ஜே. வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, முழுநேரமாகச் சின்னத்திரையில் கவனம் செலுத்திய இவர், நடிப்பின் பக்கம் திரும்பினார்.
இவர் சன் டிவியில் கடந்த 2017-ல் ஒளிபரப்பான 'அழகு' சீரியலில், க்ஷக்ஷபூர்ணா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், ரசிகர்களிடம் பெரிய பாராட்டைப் பெற்றார். அந்த வில்லி கதாபாத்திரம் இவருக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. 2020-ல் இந்த சீரியல் முடிவுக்கு வந்த பிறகு, டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பிரபலமான தொடரான 'கனா காணும் காலங்கள்' சீரிஸில் மலர் என்ற டீச்சர் கேரக்டரில் நடித்து, வில்லி பாத்திரத்தில் இருந்து விலகி, ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டினார்.

திருமண விமர்சனங்கள்
சங்கீதா தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தவர், அவரே மலர் டீச்சராக நடித்த 'கனா காணும் காலங்கள்' தொடரில் அவருக்கு மாணவராக நடித்த அரவிந்த் செஷூ. இருவருக்கும் இடையில் ஒருசில வயது வித்தியாசம் இருந்தது. சங்கீதாவை விடவும் அரவிந்த் வயதில் இளையவர் என்ற தகவல் இணையத்தில் வெளியான போது, நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
நடிகர் அரவிந்த் செஷூவின் பயோகிராபி குறித்துப் பார்க்கும்போது, அவரும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புள்ளவர் என்பது தெரிகிறது. இவர், தேசிய விருது பெற்ற படமான 'ஜெய் பீம்' படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியலான 'அய்யனார் துணை' என்ற தொடரில் சோழன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படியாக, வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் உறுதியாகக் காலூன்றியிருக்கும் ஒரு இளம் நடிகர் அரவிந்த்.
சங்கீதாவின் பதிலடி
இந்த விமர்சனங்கள் குறித்து, சங்கீதா தன் கணவர் அரவிந்துடன் இணைந்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் வெளிப்படுத்திய கருத்துகள், பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. சங்கீதா, "நான் திருமணம் செய்துகொள்ளவே கூடாது என்று நினைத்திருந்தேன். அதனால், அரேஞ்ச் மேரேஜ் வேண்டாம் என்று உறுதியாக இருந்தேன். காதலித்துச் செட் ஆனால் திருமணம் செய்துகொள்ளலாம், இல்லை என்றால் இப்படியே இருந்துவிடலாம் என்று நினைத்தேன்" என்று தனது பழைய மனநிலையைப் பற்றிக் கூறினார்.

சரியாக அந்தச் சமயத்தில்தான் அரவிந்த் தனக்குக் கல்யாண ப்ரபோசல் கொடுத்தார் என்றும், அது பிடித்திருந்ததால் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் அவர் நெகிழ்ந்தார். அடுத்த ஆறு மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், "எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் எங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அதேபோல், எங்கள் வீட்டில் இருப்பவர்களும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது, இடையில் இருக்கும் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "இது 2025-ல் இருக்கிறோம். பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள்ளலாம். வயது ஒரு தடை இல்லை" என்று தைரியமாகக் கூறியதோடு, "நீங்களும் வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து பாருங்கள், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்" என்றும் நெட்டிசன்களுக்கு பதிலடியைக் கொடுத்தார். சங்கீதா மற்றும் அரவிந்தின் இந்தத் துணிச்சலான காதல் மற்றும் திருமணம், சமூகம் விதிக்கும் தேவையற்ற கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்துள்ளது இன்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர் -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications