Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாலட்சுமியோடு பிரச்சனை..? காரணம் இதுதானா.. வருத்தத்தில் ரவீந்தர் வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவரான ரவீந்தர் சமூக வலைத்தளத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மகாலட்சுமியோடு அதிகமான புகைப்படங்களை வெளியிடும் ரவீந்தர் இப்போது சிங்கிளாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே என்று ரவீந்தர் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

What is the reason behind actress Mahalakshmis husband director Ravinder posting a sad post

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் திருமணம் சமூக வலைதள பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில மாதங்களாக தான் இவர்களைப் பற்றிய பேச்சு கொஞ்சம் குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் தற்போது குழப்பமான பதிவு ஒன்றை ரவீந்தர் வெளியிட்டு இருக்கிறார்.

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் திடீர் திருமணம் செய்து இருந்தனர். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆகி இருந்த நிலையில் இவர்களுடைய திருமணம் சமூக வலைத்தளத்தையே அதிர வைத்து விட்டது. இவர்களுடைய திருமண புகைப்படம் வெளியாகிய சிறிது நேரத்திற்குள் இந்த ஜோடி மீம்ஸ்களிலும் ட்ரெண்டாகி விட்டனர்.

காதலுக்கு அழகு தேவையில்லை உண்மையான அன்பு மட்டும் தான் தேவை என்று மகாலட்சுமி கொடுத்த விளக்கம் பலராலும் பாராட்டப்பட்டு வந்தது. அதுபோல மகாலட்சுமி பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர் பற்றி பல்வேறு வதந்திகளும் பரவி வந்தது. அதற்கெல்லாம் ரவீந்தர் பதிலளித்து இருந்தார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு உருக்கமான காதல் கவிதைகளையும் பகிர்ந்து வந்தனர். சமூக வலைதளத்தில் இவர்களுடைய காதல் மழை ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. இதனாலே நெட்டிசன்கள் பலரும் இவரை கலாய்த்து வந்தாலும் ரசிகர்கள் மேலும் நீங்கள் ஒன்றாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்த்தியும் வந்தனர்.

ரவீந்தர் தன்னுடைய வேலையில் பிஸியாக இருக்கிறார். அதுபோல மகாலட்சுமியும் தன்னுடைய நடிப்பில் பிசியாக இருக்கிறார். இருந்தாலும் இவர்கள் வார இறுதி நாட்களில் கோவிலுக்கும் ஹோட்டலுக்கும் சென்று அந்த புகைப்படங்களை வெளியிட்டு பலருக்கும் ஏக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரவீந்தர் தான் தனியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து," வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே, ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என்று புரியாத புதிராக பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார். இது யாருக்காக இந்த பதிவு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

What is the reason behind actress Mahalakshmis husband director Ravinder posting a sad post

ரவீந்தரின் ஒவ்வொரு பதிவிற்கும் முதல் ஆளாக மகாலட்சுமி தான் லைக் கொடுப்பார். அல்லது கமெண்ட் கொடுப்பார். ஆனால் இந்த பதிவிற்கு இப்ப வரைக்கும் கமெண்டுகளையும் மகாலட்சுமி கொடுக்கவில்லை. அதே நேரத்தில் தனியாக சோகமாக இருக்கும் ரவீந்தர் புகைப்படத்தை பார்த்ததும் இவர்கள் இருவருக்கும் ஏதேனும் பிரச்சனையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த பதிவு வைரல் ஆகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+