இந்த நடிகை "விஷாலின் நண்பி"யா? ராஜ போதை"யில் விழுந்த நடிகர்.. கோலிவுட்டையே சாய்க்கும் குரூப்: பிரபலம்
சென்னை: போதை ஒழிப்பு பிரிவு என்று பிரத்யேகமான பிரிவு செயல்படுகிறது.. இந்த பிரிவு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்.. போதை வஸ்துக்கள் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது தண்டனையை கடுமையாக்கப்பட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் தந்துள்ள பேட்டியில், "மதகதராஜா படத்தை புரமோஷனுக்காக, விஷாலை அணுகியபோது நிமோனியா காய்ச்சல் இருந்ததாம்.. இதனால் படபுரமோஷனை ஒருவாரம் ஒத்திவைத்தார்கள்.. ஆனாலும் நிமோனியா காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. எனவே மருத்துவர்களின் ஆலோசனையையும் மீறி, படநிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டதாக, கூறப்படுகிறது.

எனினும் ஒட்டுமொத்த பேரும், விஷாலின் உடல் நடுக்கம், பேச்சு திணறல், முகம் சோர்வு, இதெல்லாம் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்கள். 86 வயசில் விஷாலின் அப்பா, ஜிம்முக்கு போய் கும்முன்னு இருக்கார். ஆனால், மகன் 47 வயதில் இப்படியிருக்கிறார்.
ராஜபோதை: அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம், போதை வஸ்துக்களில் விஷால் சிக்கிவிட்டார் என்று சினிமா வட்டாரத்து குருவிகள் சொல்லி வருத்தப்படுகிறார்கள். விஷாலை போல நிறைய பேர் மது அருந்துகிறார்கள். ஆனால், ஆனால் அவர்கள் எல்லாம் "ராஜபோதை"க்குள் விழவில்லை. ஹெராயினை எடுத்துக் கொண்டால், ஆப்கானிஸ்தான் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி, உலகம் முழுவதும் விற்பனைக்கு செல்கிறது.. மிகப்பெரிய சர்வதேச நெட்வொர்க்கில் இந்த ஹெராயின் உள்ளது.
இதுபோன்ற பழக்கவழக்கத்துக்குத்தான் விஷால் ஆளாகிவிட்டார்.. இறுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, பொதுவெளியில் தடுமாற்றத்துடன் வர வேண்டியதாயிற்று.. விஷால் நிறைய வெளிநாடுகளுக்கு செல்வார்.. மூத்த நடிகைகள்தான் விஷாலின் நண்பிகள். மது குடித்தால் வெறும் 3 முதல் 5 மணி நேரம் மட்டுமே போதை இருக்கும் என்பதால், அதையே முழுநேரமும் குடிக்க நேரிடுகிறது..
கண்ணதாசன்: திரைப்பட உலகத்தின் பிதாமகன் கண்ணதாசன், "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" என்று பதிவு செய்துவிட்டே போயிட்டாரு., டாப் 30 உச்ச நடிகர், நடிகைகளுக்கு மாசத்துக்கு 30 நாளும் ஸ்டார் ஓட்டல்களில் மது, மாது விருந்து நடக்கும்.. இந்த தீய பழக்கவழக்களிலிருந்து விடுபட்ட ஒரே மாமனிதன் யார் என்றால் அது எம்ஜிஆர்தான். இப்படி குடிப்பவர்களை திருத்துவதுதான் படங்களிலும் இருக்கும். நிஜ வாழ்க்கையிலும் அவர் அப்படித்தான்.
ஆனால், இன்றைய இளம் நடிகர்கள், வளரவேண்டிய நடிகர்கள் மீது எனக்குரிய வருத்தம், அவர்கள் போதை வஸ்துகளுக்கு ஆளாகிவிடுவதுதான். அத்துடன் இவர்களை யாராலும் மீட்டெடுக்கவும் முடியாது.. விஷாலும் இதில் தப்ப முடியாமல் சிக்குண்டுவிட்டார். இதுதான் தற்போது டாக்காக உள்ளது. ஆனாலும், போதையை முழுமையாக விடுபட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டார் 3 மாதத்திலேயே விஷால் உடல்நிலை தேறி வர முடியும்..
பாடகி சுசித்ரா: விஷாலை போல பல நடிகர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் வெளியே தெரியவில்லை. சுசித்ரா சொல்றாங்களே, வெள்ளித்தட்டில் வைத்து போதை வஸ்துவை தருவார்களாம்.. பாலிவுட்டில் இதனால் பலபேர் அழிந்துள்ளார்கள்.. சஞ்சய் தத், தன்னுடைய வாழ்நாள் முழுக்க அழிக்கப்பட முடியாத கறையாக இந்த போதை வஸ்து மாறிவிட்டது... பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என எல்லா இடங்களிலும் போதை வஸ்துக்கள் புழக்கத்தில் உள்ளன.
லட்சங்களை தூக்கி வீச வீச, போதை வஸ்து குழுக்கள் இயங்கி கொண்டேயிருக்கின்றன. இந்த குழுக்கள்தான், இவர்களின் சப்ளையர்கள். எனவே, இவர்களை நம்முடைய அரசுதான் ஒழிக்க வேண்டும்... போதை ஒழிப்பு பிரிவு என்று பிரத்யேகமாக பிரிவு ஒன்று செயல்படுகிறது.. இந்த பிரிவு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்.. சம்பந்தப்பட்டவர்கள் மீது தண்டனையை கடுமையாக்கப்பட வேண்டும்.
ஹெல்மெட்: ஐரோப்பாயில் போதை வஸ்துக்களுடன் பிடிபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை தரப்படுகிறது.. அமெரிக்காவில் 2000 வோர்ட் வோல்டேஜ் ஹெல்மட்டினை, பிடிபட்டவர்களின் தலையில் மாட்டி, மூளையை கருக்கிவிடுவார்கள். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மரண தண்டனையே உள்ளது.. எனவே, போதை வஸ்துக்களை கடத்துபவர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.












Click it and Unblock the Notifications