ஆருத்ரா மோசடியில் சிக்கிய சீரியல் நடிகர்..பொண்டாட்டியின் தாலி கூட.. இப்போ மோசமான நிலைமை
சென்னை: சத்யா சீரியலில் குள்ள பூதமாக நடித்த நடிகர் இந்திரன் ஆருத்ரா மோசடியால் பாதிக்கப்பட்டதாக கம்பளைண்ட் கொடுத்திருக்கிறார்.
இதுவரைக்கும் கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் ஆருத்ரா நிறுவனத்தில் தான் கொடுத்திருப்பதாக கூறியிருக்கிறார்.
கடன் வாங்கி, வீட்டை லீசுக்கு விட்டு கொடுத்த பணம் ஏமாற்றப்பட்ட நிலையில் பரிதாபமாக இருக்கும் நடிகர் இந்திரன் யாரும் இதுபோல ஏமாறாதீர்கள் என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்திகளில் ஆருத்ரா மோசடி இருக்கிறது. இதில் நடுத்தரத்து மக்கள் தங்களுடைய பணத்தை முதலீடாக போட்டுவிட்டு லாபத்திற்காக காத்திருந்த நேரத்தில் அந்த நிறுவனம் மக்களை ஏமாற்றி இருக்கிறது.

இந்த வழக்கில் ஆறு கம்பெனிகள் மற்றும் முக்கிய ஏஜெண்டுகள் என மொத்தம் 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக வட்டிக்காக ஆசைப்பட்ட மக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்த ஆருத்ரா நிறுவனம் இதுவரைக்கும் சுமார் 2438 கோடி மோசடி செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் சின்னத்திரை நடிகரான இந்திரன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் முதலீடு செய்திருக்கிறார்களாம். அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 35 லட்சம் முதலீடு செய்திருந்தார்களாம். அதில் இந்திரன் தான் சொந்த வீட்டை லீசுக்கு விட்டு அந்தப் பணத்தை இதில் முதலீடு செய்திருக்கிறார். அதுபோல இந்திரனின் மனைவியான வைஷ்ணவியும் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை இதில் முதலீடு செய்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தில் வைஷ்ணவி தான் முதலீடு செய்தாராம். அப்போது ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் 4 மாதங்கள் தருவோம் என்றும் முதல் நான்கு மாதத்தில் உங்களுடைய அமௌன்ட் கிடைத்த பிறகு ஐந்தாவது மாதத்தில் இருந்து 12 வது மாதம் வரைக்கும் 25 ஆயிரம் ரூபாய் தருவோம் என்றும் கூறினார்களாம். அதுபடி ஆரம்பத்தில் இவருக்கு கிடைத்து வந்ததாம்.

அதற்குப் பிறகு வைஷ்ணவி அக்கம் பக்கத்தில் கொஞ்சம் கடன் வாங்கி இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கிறார். இவர் நிதி முதலீடு செய்த அடுத்த மாதமே அங்கே ரைடு வந்து பிறகு பிரச்சினையாகி அதற்குப் பிறகு பணம் வருவது நின்று விட்டதாம். தங்களுடைய திருமணம் காதல் திருமணம் என்றும் திருமணத்திற்கு போது இந்த பண பிரச்சனையால் அதிக அளவில் பிரச்சனைகளை சந்தித்து வந்ததாகவும் இப்போது கூட வாங்கிய கடனை கட்ட முடியாமல் ரொம்பவே கஷ்டப்படுவதாகவும் கூறி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் தன்னுடைய சொந்த வீட்டில் இருந்து இப்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தனக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் முடிந்தது என்றும், திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியின் கழுத்தில் இருக்கும் தாலியை கூட பிரித்துக் கோர்க்க முடியவில்லை. அடகு வச்ச நகை எல்லாம் திருப்ப முடியவில்லை என்று வேதனையோட நடிகர் இந்திரன் பேசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எங்களை போல இனி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
-
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
Youth Review : யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! கென் கலக்கினாரா? கலங்க வைத்தாரா? ரிவ்யூ இதோ -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications