ஆருத்ரா மோசடியில் சிக்கிய சீரியல் நடிகர்..பொண்டாட்டியின் தாலி கூட.. இப்போ மோசமான நிலைமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்யா சீரியலில் குள்ள பூதமாக நடித்த நடிகர் இந்திரன் ஆருத்ரா மோசடியால் பாதிக்கப்பட்டதாக கம்பளைண்ட் கொடுத்திருக்கிறார்.

இதுவரைக்கும் கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் ஆருத்ரா நிறுவனத்தில் தான் கொடுத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

கடன் வாங்கி, வீட்டை லீசுக்கு விட்டு கொடுத்த பணம் ஏமாற்றப்பட்ட நிலையில் பரிதாபமாக இருக்கும் நடிகர் இந்திரன் யாரும் இதுபோல ஏமாறாதீர்கள் என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்திகளில் ஆருத்ரா மோசடி இருக்கிறது. இதில் நடுத்தரத்து மக்கள் தங்களுடைய பணத்தை முதலீடாக போட்டுவிட்டு லாபத்திற்காக காத்திருந்த நேரத்தில் அந்த நிறுவனம் மக்களை ஏமாற்றி இருக்கிறது.

who was affected by Aarudra Fund small screen actor Indran Information given

இந்த வழக்கில் ஆறு கம்பெனிகள் மற்றும் முக்கிய ஏஜெண்டுகள் என மொத்தம் 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக வட்டிக்காக ஆசைப்பட்ட மக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்த ஆருத்ரா நிறுவனம் இதுவரைக்கும் சுமார் 2438 கோடி மோசடி செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் சின்னத்திரை நடிகரான இந்திரன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் முதலீடு செய்திருக்கிறார்களாம். அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 35 லட்சம் முதலீடு செய்திருந்தார்களாம். அதில் இந்திரன் தான் சொந்த வீட்டை லீசுக்கு விட்டு அந்தப் பணத்தை இதில் முதலீடு செய்திருக்கிறார். அதுபோல இந்திரனின் மனைவியான வைஷ்ணவியும் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை இதில் முதலீடு செய்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தில் வைஷ்ணவி தான் முதலீடு செய்தாராம். அப்போது ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் 4 மாதங்கள் தருவோம் என்றும் முதல் நான்கு மாதத்தில் உங்களுடைய அமௌன்ட் கிடைத்த பிறகு ஐந்தாவது மாதத்தில் இருந்து 12 வது மாதம் வரைக்கும் 25 ஆயிரம் ரூபாய் தருவோம் என்றும் கூறினார்களாம். அதுபடி ஆரம்பத்தில் இவருக்கு கிடைத்து வந்ததாம்.

who was affected by Aarudra Fund small screen actor Indran Information given

அதற்குப் பிறகு வைஷ்ணவி அக்கம் பக்கத்தில் கொஞ்சம் கடன் வாங்கி இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கிறார். இவர் நிதி முதலீடு செய்த அடுத்த மாதமே அங்கே ரைடு வந்து பிறகு பிரச்சினையாகி அதற்குப் பிறகு பணம் வருவது நின்று விட்டதாம். தங்களுடைய திருமணம் காதல் திருமணம் என்றும் திருமணத்திற்கு போது இந்த பண பிரச்சனையால் அதிக அளவில் பிரச்சனைகளை சந்தித்து வந்ததாகவும் இப்போது கூட வாங்கிய கடனை கட்ட முடியாமல் ரொம்பவே கஷ்டப்படுவதாகவும் கூறி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் தன்னுடைய சொந்த வீட்டில் இருந்து இப்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தனக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் முடிந்தது என்றும், திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியின் கழுத்தில் இருக்கும் தாலியை கூட பிரித்துக் கோர்க்க முடியவில்லை. அடகு வச்ச நகை எல்லாம் திருப்ப முடியவில்லை என்று வேதனையோட நடிகர் இந்திரன் பேசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எங்களை போல இனி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+