10 வயதில் ஏற்பட்ட தீ விபத்து.. மருந்தாய் மலர்ந்த நிஜ காதல்.. இந்த கேரள ஜோடிக்கு இத்தனை கஷ்டங்களா?
சென்னை: உண்மையான காதலுக்கு அழகு தேவை இல்லை என்று பலர் சொல்வதை கேட்டு இருப்போம். ஆனால் அப்படி காதலிப்பவர்களை நாம் நிஜத்தில் பார்க்கும்போது நம்முடைய மனதில் பல்வேறு கேள்விகள் எங்கிருந்தோ வந்து விடுகிறது.

ஒருவேளை அந்தப் பொண்ணு அழகாக இருந்து மாப்பிள்ளை அழகாக இல்லை என்றால் இந்த பொண்ணுக்கு என்ன குறை எதுக்கு இப்படி ஒரு பையனை கல்யாணம் பண்ணுச்சி அல்லது காதலிச்சிட்டு இருக்கு என்று சொல்லுவோம்.
அதே நேரத்தில் பையன் அழகாக இருந்து பொண்ணு வெளி தோற்றத்தால் ஏதேனும் குறைபாடுடன் இருந்தால் பார்ப்பவர்கள் வாயை வைத்து சும்மா இருப்பது கிடையாது.
இந்தப் பையன் அந்த பொண்ணை வச்சு ஏதோ காரியத்துக்காக தான் இந்த பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கான். அல்லது காதலிச்சு கொண்டிருக்கிறான் என்று வாய் கூசாமல் டக்கென்று பேசுபவர்கள் ஏராளம். ஒரு சிலர் உடனே அந்த பையனுக்கு ஏதேனும் குறை இருக்குமா? இல்ல அந்த பொண்ணு வீட்டுல ஏதும் வசதியோ, பணத்துக்காக இப்படி லவ் பண்றானோ என்றெல்லாம் கதைக்கட்டி விடுவது வாடிக்கைதான்.
அந்த மாதிரி தான் தற்போது கேரளாவில் ஒரு தம்பதி பல்வேறு ஏச்சுகளையும் பேச்சுகளையும் வாங்கிக் கொண்டு இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தங்களுடைய வாழ்க்கையில் காதல் என்ற ஒற்றை வார்த்தையால் 11 வருடங்களாக சந்தோஷமாக பயணித்து இப்போது திருமண பந்தத்திலும் காதலோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் சமீபத்தில் இணையதளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமானவர்கள் தான். அந்த பெண்ணின் பெயர் அம்ருதா அந்தப் பையனின் பெயர் அகில் இவர்கள் இருவருக்கும் அறிமுகமானது பேஸ்புக் மூலமாகதானாம். அந்தப் பெண் அம்ரிதா ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது கடைசி பரீட்சையின் போது ஒரு நாள் படித்து விட்டு இவருடைய வீட்டில் கட்டிலுக்கு கீழே இருந்த மண்ணெண்ணெய் விளக்கு பக்கத்தில் இவருடைய புத்தகத்தை வைக்க போக அப்போது எதிர்பாராத விதமாக அந்த மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்து தீ பிடித்ததில் இவருடைய முகத்தில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
முகம் முழுக்க தீக்காயம் பட்டதால் இவருடைய முகம் அப்படியே சிதலமடைந்து இருக்கிறது. அதில் அவருடைய இரண்டு காதுகளும் போய்விட்டதாம். கண்ணும் மூடாதாம். ஆனாலும் இவர் அவருடைய அம்மாவும் அப்பாவும் கொடுத்த பாசத்தால் அடுத்து வாழ வேண்டும் என்று அந்த வலி வேதனையிலிருந்து வெளியே வந்திருக்கிறார்.
ஆனாலும் ஸ்கூலுக்கு போகும்போது ஹாஸ்பிடலுக்கு போகும்போது இதுவரை எல்லோரும் பரிதாபமாக பார்ப்பதும், ஐயோ என்று சிலர் சொல்லுவதும், சிலர் அருவருப்பமாக பார்ப்பதும் இவருக்கு வேதனையை கொடுத்திருக்கிறது. அதற்கு பிறகு தான் இவருடைய அம்மா இவருக்காக கார் ஓட்டி படித்து இவரை தினமும் காரில் ஸ்கூலுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார்(இப்போதும் அவருடைய அம்மா கேரளாவில் வாடகை கார் ஓட்டிக் கொண்டிருக்கிறாராம்).
ஆனாலும் ஸ்கூலில் இவரோட சீனியர், ஜூனியர் எல்லாரும் இவரை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் போது இவர் வேதனையின் உச்சத்தில் பல நாள் கதறி அழுகிறாராம். ஆனாலும் வீட்டிற்கு வந்து அவருடைய தந்தை தாய் கொடுத்த நம்பிக்கையால் அடுத்தடுத்து படித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் இவர் பேஸ்புக் யூஸ் பண்ணிக் கொண்டிருக்கும்போது அகிலுடைய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இருவரும் முதலில் நட்பாக பழகி இருக்கின்றனர். பிறகு காதலிக்க தொடங்கி இருக்கின்றனர். இவர்கள் காதலிக்கும் போதே அம்ரிதா தன்னை பற்றி எல்லா விவரத்தையும் கூறிவிட்டாராம். பிறகு இருவரும் நேரடியாக சந்தித்து இருக்கிறார்கள். அப்போதும் அகில் தன்னுடைய காதலில் உறுதியாக இருக்க பிறகு வீட்டில் சொல்லி திருமணத்தை முடித்து இருக்கின்றனர்.

இப்போது இவர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் என எல்லாவற்றிலும் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். அதை பார்த்து பலர் அகில் அழகாக இருக்கிறார் இவர் எதுக்கு இந்த மாதிரி பொண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்று சிலர் கேள்வி கேட்டு கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு சிலர் இந்த பொண்ணுக்கு இருக்கும் குறையை வைத்து இவன் பிரபலத்தை தேடிக் கொண்டிருக்கிறான் என்று சிலர் கமெண்ட் போடுகிறார்களாம்.
ஆனாலும் யார் என்ன போட்டாலும் நாங்கள் அதைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது. எனக்கு அம்மா கிடையாது அம்மா மாதிரி எனக்கு அம்ரிதா இருக்கிறார். அதனால் நான் அவரை எப்போதும் காதலிப்பேன். எனக்கு வெளி அழகு தேவையே இல்லை. அமிர்தாவின் குணம் தான் எனக்கு ரொம்பவே பிடித்தது என்று அகில் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இவருக்கு பலர் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications