திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உனக்கு 32.. எனக்கு 18! உல்லாசமாக இருந்த நேரத்தில் நேர்ந்த சோகம்.. கொல்லம் கொலையில் புது ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "கொல்லம் பாத்திமா கல்லூரி அருகே உள்ள ரயில் கட்டிடத்தில் துர்நாற்றம் வீசி வருவதாக அவ்வழியாக சென்ற இரண்டு இளைஞர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தோம். அங்கு ரயில்வே கட்டிடத்தின் மேல் தளத்தில் பெண்ணின் சடலம் ஒன்று நிர்வாணமான நிலையில் இருந்தது. உடலின் பாகங்கள் சிதைந்த நிலையில் இருந்தன.

எனவே உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தோம். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என்கிற கோணத்தில் விசாரணையை தொடங்கினோம். விசாரணையில் உயிரிழந்த பெண் கொல்லத்தை சேர்ந்த உமா(32) என்பது தெரியவந்தது. இவருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் பிஜு விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

மோசம் செய்த தயாரிப்பாளர்.. ரோட்டில் உட்கார்ந்து நிர்வாண போராட்டம் நடத்திய துணை நடிகை! மோசம் செய்த தயாரிப்பாளர்.. ரோட்டில் உட்கார்ந்து நிர்வாண போராட்டம் நடத்திய துணை நடிகை!

அழகு சாதன பொருட்கள்

அழகு சாதன பொருட்கள்

இதனையடுத்து சின்ன வேலைகளை செய்துவந்த உமா ஒரு கட்டத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட தொடங்கினார். அதில் ஓரளவு வருமானம் இருந்திருக்கிறது. ஆனால், உமாவின் குழந்தைகளை பராமரிக்கும் அளவுக்கு வருமானம் போதாத காரணத்தினால் அவர் இந்த தொழிலை விட்டுவிட்டு அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் பணியில் சேர்ந்திருக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக இவர் இந்த தொழிலைதான் செய்து வந்திருக்கிறார். இதற்கிடையில், இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த 24 வயதான நாசு எனும் இளைஞனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

புகார்

புகார்


இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டுள்ளனர். அதேபோல பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து சென்றுள்ளனர். இப்படி இருக்கையில் கடந்த 29ம் தேதி எங்களுக்கு ஒரு புகார் வந்தது. புகாரில் உமாவை காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனையடுத்து நாங்கள் உமாவின் செல்போனை மையமாக கொண்டு விசாரணையை தொடங்கினோம். இதனையடுத்து உமாவின் செல்போனுக்கு அழைத்தபோது வேறு யாரோ பேசியுள்ளனர். பின்னர் அவர்கள் பாதியிலேயே அழைப்பை துண்டித்துவிட அதன் பின்னர் சென்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது.

செல்போன்

செல்போன்

இந்த வழக்கு ஒரு பக்கம் விசாரணையில் இருக்க நாங்கள் புத்தாண்டு அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு இளைஞரிடமிருந்து செல்போனை கைப்பற்றினோம். அதை சோதனை செய்து பார்த்ததில் செல்போனுக்கும் அந்த இளைஞனுக்கும் தொடர்பில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இளைஞரிடம் விசாரித்ததில் அந்த செல்போன் கீழே கிடந்து என்று கூறியுள்ளார். பின்னர் விசாரணையில் ஒரு க்ளூ கிடைத்தது. அதாவது உமா அடிக்கடி நாசு என்பவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். சம்பவத்தன்றும் கடைசியாக இவருக்குதான் பேசியிருக்கிறார்.

விசாரணை

விசாரணை

இதனையடுத்து நாங்கள் நாசுவை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தோம். நாசுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடந்த 29ம் தேதி உமாவை சந்தித்ததையும் வாகன சோதனையில் கைப்பற்றப்பட்ட செல்போன் உமாவுடையதுதான் என்றும் உறுதி செய்துள்ளார். அதாவது இவர்கள் இருவரும் கொல்லம் பாத்திமா கல்லூரி அருகே உள்ள ரயில்வே கட்டிடத்திற்கு சென்றிருக்கின்றனர். அங்கு இவர்கள் உல்லாசமாக இருந்தபோது திடீரென உமாவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வலிப்பிலிருந்து உமாவை காக்க நாசு இரும்பு கம்பியை கொடுத்திருக்கிறார். ஆனால் அதுவே உமாவின் உயிரை பறித்திருக்கிறது. உமா அந்த கம்பியால் தனது தலையில் பலமாக தாக்கிக்கொண்டுள்ளார்.

 உயிரிழப்பு

உயிரிழப்பு

இதனால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து நாசு தப்பி சென்றுள்ளார். இந்த தகவலை மறைக்க உமாவின் செல்போனை எடுத்து வேறு ஒரு இடத்தில் வீசி சென்றுள்ளார். நாசு கொடுத்த வாக்குமூலத்திலிருந்து எங்களுக்கு கிடைத்த தகவல்கள் இவை. இதனை உறுதி செய்ய நாங்கள் சம்பவம் நடந்த பகுதியை சுற்றி சோதனை செய்தோம். சோதனையில், உமாவின் உடைகள், உள்ளாடைகள், ஹேன்ட் பேக் ஆகியவை கிடைத்திருக்கின்றன.

 தகனம்

தகனம்


அதேபோல கட்டிடத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் நீச்சல் வீரர்கள் சோதனை செய்தனர். அதில் எதுவும் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனையில் நாசு கூறியிருந்தது உண்மையென்று தெரிய வந்தது. இதனையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது" என்று கூறியுள்ளனர். தற்போது உமாவின் இரண்டு குழந்தைகள் அநாதையாக நின்றுள்ளனர். நாசு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொல்லத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The incident where a 32-year-old woman was found naked in Kerala's Kollam district has caused a great shock. A 24-year-old youth has been arrested after this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X