வயநாட்டில்.. மீட்பு பணிக்கு இடையே உணவு சாப்பிட்ட ராணுவ வீரர்களுக்கு ஷாக்.. இப்படி எல்லாம் நடக்குமா?
திருவனந்தபுரம்: வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த வீரர்களுக்கு நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அங்கு மீட்பு பணிகள் மழை வெள்ளம் காரணமாக தொய்வடைந்து உள்ளது. இப்போது நடந்துள்ள புதிய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை அளித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக மும்பை, கேரளா ஆகிய இடங்களில் அதிகமாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மஹாராஷ்டிராவில் மும்பை உட்பட பல நகரங்கள் நீரில் மூழ்கிவிட்டது.

அதேபோல் கர்நாடகாவிலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் இதனால் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக மிக கனமழை பெய்து வருகிறது. வயநாடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு, திரிச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.
நிலச்சரிவு: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கே இதுவரை 400 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் கிட்டத்தட்ட600 பேர் வரை காணவில்லை. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன.
மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை. இதன் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய மூன்று கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன.
ஷாக்கிங் அதன்படி, முண்டக்காய் டவுன் முழுக்க முழுக்க களிமண்ணில் கட்டப்பட்ட கிராமம். இது சரிந்து அப்படியே சூரல் மாலா கிராமத்தில் விழுந்துள்ளது. இதனால் அந்த கிராமமும் சரிந்து உள்ளது. இதில் இருந்து சென்ற மண்.. அப்படியே தண்ணீரில் கலந்து அங்கே இருக்கும் ஏறுவலாஞ்சி ஆற்றின் போக்கையே மாற்றி உள்ளது. அதாவது அந்த ஆறு தடை பட்டு அருகே உள்ள ஊர்களை உடைத்துக்கொண்டு புதிய திசையில் தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. அங்கே நேரடியாக களப்பணிகளில் ஈடுபட்டு வரும் மக்கள் நம்மிடம் இது தொடர்பாக பேசி உள்ளனர்.
அதிர்ச்சி சம்பவம்: இப்படிப்பட்ட நிலையில்தான் வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த வீரர்களுக்கு நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த வீரர்களுக்கு ஃபுட் பாய்சன் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கே ஆற்று நீரில் காய்க்கறிகளை கழுவியது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கே ஆறுகளில் பிணங்கள் மிதந்து வந்தது. அந்த நீரில் உணவு சமைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கிய உணவால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஃபுட் பாய்சன் ஆனதால், தன்னார்வலர்கள் வழங்கும் உணவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உணவு வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், மீட்பு படை வீரர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications