பிஷப் பிரான்கோ முலக்கல் விடுதலை! பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டயம் நீதிமன்றம் தீர்ப்பு!
திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலிருந்து பேராயர் பிரான்கோ முல்லக்கல்லை கோட்டயம் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
வழக்கில் போதிய ஆதாரங்கள் வலுவாக இல்லாததால் பேராயர் பிரான்கோ முலக்கல்லை விடுவிப்பதாக கோட்டயம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பேராயர் பிரான்கோ முல்லக்கல் மீது கோட்டயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் அவரை கைதும் செய்தது.

நாட்டிலேயே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் பேராயர் என்ற பட்டத்தை பெற்றவர் பிரான்கோ முல்லக்கல். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்ட பேராயராக இருந்த இவர், கேரள கன்னியாஸ்திரி ஒருவர் கூறிய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டால் கோட்டயம் காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு ஆளானார்.
மேலும், பேராயர் குறித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வாடிகனுக்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து தனது பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்கொண்டார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த கேரள மாநிலம் கோட்டயம் கூடுதல் சிறப்பு நீதிமன்றம், கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேராயர் பிரான்கோ முலக்கல்லை விடுவித்து உத்தரவிடுள்ளது. பிரான்கோ மீது முன் வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பதாகவும் புகாருக்கான ஆதாரங்கள் வலுவாக இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கை பொறுத்தவரை கேரளாவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.பேராயர் முலக்கல்லுக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்தபோது, கேரளாவில் அதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
-
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications