மிரட்டும் "13 பூனைகள்".. கேரளாவில் தொற்று அதிகரிக்க இவைதான் காரணமா.. கலக்கத்தில் வயநாடு மக்கள்
வயநாட்டில் பூனைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன
திருவனந்தபுரம்: கேரளாவில் தொற்று அதிகமாகி வருகிறது.. 2வது அலை அடிக்க போகிறது என்று பேசப்பட்டு வரும் நிலையில், 13 பூனைகள் இறந்துள்ளது மேலும் கிலியை தந்து வருகிறது!
மிக குறைந்த நாட்களில்.. கொரோனாவை ஒழித்துகட்டி உலகையே திரும்பி பார்க்க வைத்தது கேரள அரசு.. இதற்கு காரணம் அவர்களது சரியான திட்டமிடல், தலைவர்களின் கூட்டு முயற்சி, மக்களின் ஒத்துழைப்பு என்று இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
நாட்டிற்கே கேரளா முன்மாதிரி என்று பாராட்டப்பட்ட நிலையில், கேரளாவின் வழிமுறைகளை தமிழக அரசும் பின்பற்ற தொடங்கி உள்ள நிலையில் அம்மாநிலத்தில் திரும்பவும் தொற்று எண்ணிக்கை ஆரம்பமாகி உள்ளது.

வெளிநாடு
இதை நேற்று பினராயி விஜயனும் உறுதி செய்திருந்தார். "கேரளத்தில் புதிதாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது... இவற்றில் 12 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள்... மொத்தம் 117 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் கண்ணூரில் 10 பேர், பாலக்காட்டில் 4 பேர், காசர்கோட்டில் 3 பேர், மலப்புரம் மற்றும் கொல்லத்தில் தலா ஒருவர் என 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று கூறினார்.

அசால்ட்
எதனால் திடீரென கேரளாவில் இத்தனை பேர் பாதிப்பு என தெரியவில்லை.. ஊரடங்கை தளர்த்தியதால் அசால்ட்டாக இருந்துவிட்டார்கள் என்கிறது ஒரு தரப்பு.. ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடு விதிகள் தளர்த்தப்பட்ட போதிலும் கொரோனா பீதியால் பாலக்காடு உட்பட பல இடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியே வரவில்லை என்கிறது ஒரு தரப்பு.. இதனிடையே வயநாட்டில் பூனைகள் மிரட்டி வருகின்றன.

இறப்பு விகிதம்
நிறைய பூனைகள் கேரள மாநிலத்தில் தொடர்ந்து மரணமடைந்து வருவது பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மனந்தவடி, மேப்படி பகுதிகளில் இறப்பு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.. இந்தப் பகுதியில் கடந்த சில நாளில் மட்டும் 13 பூனைகள் இறந்துள்ளன.. இதனால் பதறி போன மக்களில் சிலர் விலங்குகள் நல துறையினரிடம் புகாரும் அளித்தனர். அதனடிப்படையில், அவர்களும் விரைந்து வந்து இறந்து போன பூனைகளின் ரத்த மாதிரியை டெஸ்ட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

பயப்பட வேண்டாம்
இதை பற்றி விலங்குகளுக்கான சிறப்பு மருத்துவர் ஒருவர் சொல்லும்போது, ஃபெலின் பார்வோ என்னும் வைரஸ் தொற்று காரணமாகத்தான் பூனைகள் மரணம் அதிகரித்து வருகின்றன... இதனை சரிசெய்ய ஏற்கனவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்ல, இந்த வைரஸ் பூனைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது.. அதனால் யாருமே பயப்பட தேவையில்லை" என்றார். எனினும் தொற்று எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, பூனைகளின் இறப்பும் அதிகமாகி வருவதால் மக்கள் லேசான அச்ச நிலையிலே உள்ளதாக கூறப்படுகிறது
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications